(எம்.மனோசித்ரா)
காணாமல் போனோர் தொடர்பிலான உண்மைகளை கண்டறிந்து தீர்வு காண்பது நீதியமைச்சரின் வடக்கு விஜயத்தில் ஒரு முக்கிய விடயமாக உள்ளது.
காணி விவகாரங்கள் உள்ளிட்ட ஏனைய சட்ட நடவடிக்கைகளை போன்று காணாமலாக்கப்பட்டோர் விடயம் குறித்து அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளது.
ஆனால் இந்த விடயத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையீடுகள் இருக்காது என அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பதிரண தெரிவித்தார்.
காணாமல் போன மற்றும் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி கொழும்பில் திங்களன்று விசேட நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில் இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் முறையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதற்கமைய பிரகீத் எக்னலிகொட உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் யாவை?
மற்றும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஊடகத்துறை அமைச்சராக பதவி வகித்த போது சமூக வலைத்தளங்கள் தொடர்பில் முன்வைத்த யோசனை கருத்து சுதந்திரத்தை முடக்குவதாக அமைந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு யாது என 1 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்டக்கப்பட்ட போதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் ஒழுங்குமுறையுடன் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது. இதில் எவ்வித தடைகளோ அல்லது புதிய சட்ட விதிமுறைகளோ நடைமுறைப்படுத்தப்படவில்லை.
காணாமல் போனோர் மற்றும் அது தொடர்பான அலுவலக நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி முன்னெடுத்து வருகின்றார்.
அதற்கமைய நீதி அமைச்சரின் வடக்கு விஜயத்தில் காணாமல் போனோர் தொடர்பிலான உண்மைகளை கண்டறிந்து தீர்வு காண்பது முக்கியமான விடயமாகவுள்ளது.
மேலும் காணி விவகாரங்கள் உள்ளிட்ட ஏனைய சட்ட நடவடிக்கைகளை போன்று காணாமலாக்கப்பட்டோர் விடயம் குறித்து அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் இது தொடர்பிலான நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையீடு செய்வதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை.
காணாமல் போனோர் விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடமாடும் சேவையின் பிரதான வேலைத்திட்டம் காணிகள் உள்ளிட்ட சட்ட ரீதியான விடயங்களைப் போன்றே காணாமல் போனோர் தொடர்பிலும் அவர்களின் நிலைமை தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதாகும்.
அந்த நடவடிக்கைகளை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் வழங்கப்படக் கூடிய உச்சபட்ச ஒத்துழைப்பினை வழங்க தொடர்ந்தும் செயற்படுவோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM