500 கர்ப்பிணிகளுக்கு கொவிட் தொற்றுறுதி

Published By: Digital Desk 3

01 Feb, 2022 | 09:55 AM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போது 500 கர்ப்பிணிகள் கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில தினங்களாக கர்ப்பிணிகள் தொற்றுக்குள்ளாகும் வீதம் அதிகரித்து வருவதால் மூன்றாம் கட்ட தடுப்பூசியை தாமதமின்றி பெற்றுக் கொள்வதாக விசேட வைத்திய நிபுணர் சித்திரமாலி டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அண்மைய தினங்களாக கர்பிணிகள் கொவிட் தொற்றுக்குள்ளாகும் வீதம் சடுதியாக அதிகரித்து வருகிறது. 

தற்போது 500 கர்ப்பிணிகள் கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் மூன்றாம் கட்ட தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதில் அவர்கள் ஆர்வம் செலுத்துவது குறைவாகவுள்ளது.

கடந்த கொவிட் அலைகளின் போது தடுப்பூசியின் ஊடாகவே கர்ப்பிணிகள் தொற்றுக்கு உள்ளானாலும் , மரணிக்காமல் பாதுகாக்கக் கூடியதாக இருந்தது.

தற்போது ஒமிக்ரோன் வைரசும் காணப்படுவதால் மூன்றாம் கட்ட தடுப்பூசியை தவிர்ப்பது பாதுகாப்பானதல்ல. எனவே அந்தந்த பிரதேசங்களிலுள்ள சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளுக்குச் சென்று தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு கர்பிணிகளை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08