படுகொலைச் செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை சந்தேக நபர்களைத் தேடிய விசாரணைகள் புதிய கோ ணத்தில் திருப்பப்பட்டுள்ளன. கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் இருந்து காணாமல் போனதாக கூறப்படும் லசந்த விக்ரமதுங்கவின் குறிப்புப் புத்தகம் மற்றும் அது தொடர்பிலான பதிவுகளைக் கொண்டிருந்த கல்கிஸை பொலிஸ் நிலையத்தின் அன்றாட தகவல் புத்தகத்தின் பக்கங்கள் தொடர்பில் இந்த விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பிலேயே கடந்த வாரம் முன் னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ன, முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார, முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமந்த அதிகாரி மற்றும் அப்போதைய பிரதான பொலிஸ் பரிசோதகர் மகேஷ் பெரேரா ஆகியோர் விசாரிக்கப்பட்டு வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணையில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன தனக்கு குறித்த குறிப்புப் புத்தகம் தொடர்பில் எவ்வித தகவலும் தெரியாது என விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2009 ஜனவரி 8ஆம் திகதி கொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட முன்னர் அவரது காரை பின் தொடர்ந்து வந்த கொலையாளிகளின் வாகன இலக்கத்தை குறிப்புப் புத்தகத்தில் பதிவு செய்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை யாரோ துரத்து கிறார்கள் என தெரிந்ததும் அப்போதைய அரசின் முக்கிய நபர் ஒருவருக்கு லசந்த விக்ரமதுங்க தொலைபேசியூடாக விடய த்தை தெரியப்படுத்தியுள்ளார். அவர் உடனே வாகன இலக்கத்தை கேட்ட போது தனது காரின் பக்க வாட்டு கண்ணாடியூடாக பார்த்து அதனை தனது குறிப்புப் புத்த கத்தில் பதிவு செய்துள்ள லசந்த அதனை குறித்த முக்கியஸ்தருக்கு அறிவிப்பதற்குள் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந் நிலையிலேயே குற்றம் இடம்பெற்ற இடத்தை சோதனைச் செய்த கல்கிஸை பொலிஸார் அந்த குறிப்புப் புத்தகத்தை மீட்டுள்ளனர். அது தொடர்பிலான தகவல்களை பொலிஸில் அன்றாடம் தகவல்களை பதிவு செய்யும் பதிவுப் புத்தகமான ஆர்.ஐ.பி. புத்தகத்திலும் எழுதியுள்ளனர்.
பின்னர் அப்போதைய பொலிஸ் மா அதிபரின் பெயரைப் பயன்படுத்தி அந்த குறி ப்புப் புத்தகம் கல்கிஸை பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பொலிஸ் மா அதிபரிடம் எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் அந்த புத்தகம் மிரிஹானையில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் தற்போது தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் அந்த குறிப்புப் புத்தகம் அப்போதைய விசாரணையாளர்களிடமிருந்து கைமாற முன்னர் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக கொலையாளிகள் வருகை தந்த வாகனத்தின் இலக்கம் எழுதப்பட்ட பக்கம் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படமானது குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்துள்ளதாக கூறப்படும் நிலையிலேயே அது தொடர்பிலான விசாரணைகள் தொடர்கின்றன. எவ்வாறாயினும் குறிப்புப் புத்தகம் மீட்கப்பட்டமை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட விடயங்களை பதிவு செய்திருந்த கல்கிஸை பொலிஸ் நிலையத்தின் ஆர்,ஐ, பி. புத்தகத்தின் குறித்த பக்கங்கள் மட்டும் காணாமல் போயுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இந் நிலையி லேயே பொலிஸார் சந்தேக நபர்களைத் தேடிய விசாரணைகளை பல கோணங்களில் திருப்பியுள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப் பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, அதன்பணிப்பாளர் சிரே ஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நாகஹமுல்ல ஆகியோரின் மேற்பார்வையில் உதவி பொலிஸ் அத்தியட்சர் திசேரா தலைமையி லான பொலிஸ் குழு மேலதிக விசாரணை களைத் தொடர்கின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM