(எம்.ஆர்.எம்.வசீம்)
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. இந்த அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்தால் வாழ்வதற்கு நாடு இல்லாமல் போகும். அதனால் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார்.
கண்டியில் வெள்ளிக்கிழமை (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ஊடகவியலாளர் ஒருவரினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. இதுதொடர்பில் மக்களை அறிவுறுத்தவும் நாட்டை கட்டியெழுப்பும் ஐக்கிய தேசிய கட்சியின் வேலைத்திட்டத்தை மக்கள் மயமாக்கும் நடவைக்கையை நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம்.
அரசாங்கத்தின் இயலாமை தொடர்பாக பாராளுமன்றத்தில் குரல் எழுப்ப எமக்கு ஒரு உறுப்பினர் மாத்திரமே இருக்கின்றார். தலைவர் ரணில் விக்ரமசிங்க அந்த நடவடிக்கையை சிறந்த முறையில் முன்னெடுத்து வருகின்றார்.
அத்துடன் தற்போதைய அரசியல் நிலைமையில் ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவது நல்லது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.
நாட்டின் தற்போதைய பிரச்சினையை தீர்ப்பதாக இருந்தால், ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி மாத்திரமல்ல, அனைத்து கட்சிகளும் ஒரு மேடைக்கு வரவேண்டும்.
என்றாலும் நாடு எதிர்கொண்டுள்ள மோசமான நிலையில் இருந்து நாட்டை கட்டியெழுப்ப அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படும் காலம் தூரத்தில் இல்லை. சரியான நேரத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணையும் என நம்புகின்றேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM