(எம்.மனோசித்ரா)
நாட்டில் தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்களில் 95 சதவீதமானோர் ஒமிக்ரோன் தொற்றாளர்களாகக் காணப்படுவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாகவே வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் தொற்றாளர் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் பட்டுவந்துட்டாவ இதனைத் தெரிவித்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் மல்காந்தி கல்ஹேன,
நாட்டில் நாளாந்தம் இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகிறது. நாளாந்தம் 900 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
ஜனவரி 17 ஆம் திகதிக்கு பின்னரான இரு வாரங்களுக்குள் இவ்வாறு தொற்றாளர் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. புதன்கிழமை மாத்திரம் 930 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் டெல்டா பரவல் காணப்பட்ட போது நாளாந்தம் 500 தொற்றாளர்களே இனங்காணப்பட்டனர். ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை 900 ஆக அதிகரித்துள்ளது. ஒமிக்ரோன் மிக வேகமாக பரவி வருகின்றமையே இதற்கான காரணமாகும்.
எவ்வாறிருப்பினும் ஒமிக்ரோன் மிக வேகமாகப் பரவக் கூடியது என்ற போதிலும், தீவிர நிலைமையை ஏற்படுத்தக் கூடியதல்ல.
எனவே இதிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானதாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM