(இராஜதுரை ஹஷான்)
கொவிட்-19 வைரஸ் தாக்கத்திற்கு எதிரான ஒரு தடுப்பூசியை பெற்றுக் கொண்டு இலங்கைக்கு வருகை தரும் இரட்டை குடியுரிமையாளர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் முழுமையான தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களாக கருதப்படுவர்.

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர் 50000 ஆயிரம் டொலர் காப்புறுதியை பெற்றிருத்தல் வேண்டும்.இலங்கையில் வசிக்கும் காலப்பகுதியில் கொவிட் -19 வைரஸ் தொற்றுக்குள்ளானால் வைத்தியசாலை சிகிச்சைக்கு காப்புறுதி ஊடாக செலுத்தப்படும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் இரட்டை குடியுரிமையுடைவர்கள்,வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக செயற்படுத்தப்படும் தனிமைப்படுத்தல் முறைமை தொடர்பில் திருத்தப்பட்ட சுகாதார வழிகாட்டல் சுற்றறிக்கையினை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இன்றைய தினம் வெளியிட்டுள்ளார்.
புதிய சுகாதார வழிகாட்டல்களின் பிரகாரம் கொவிட்-19 வைரஸ் தாக்கத்திற்கு எதிரான ஒரு தடுப்பூசியை பெற்று கடந்த ஆறு மாதங்களில் கொவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இரட்டை குடியுரிமையினை கொண்டவர்களம்,இலங்கைக்கு வரும் அனைத்து வெளிநாட்டவர்களும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களாக கருதப்படுவர்.
மேலும் நாட்டிற்கு வந்தவுடன் விமான நிலையத்தில் முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர் பரிசோதனையின் போது 30ற்கும் குறைவான சி.டி (நோயறிதல் நுட்பம்) பரிசோதனை முடிவுகளைக் கொண்ட சுற்றுலாப் பயணிகள் மற்றும் இலங்கையர்கள் 7 நாட்கள் சுய தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்கு இணங்கி விமான நிலையத்தில் இருந்து வெளியேற முடியும்.
30ற்கும் அதிகமான சி.டி பெறுபேறுகளை கொண்டவர்களின் வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு தேவையான சகல வசதிகளும் இருந்தால் மாத்திரமே அவர்கள் விமான நிலையத்தில் இருந்து வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.
அத்துடன் முழுமையாக தடுப்பூசி பெற்றுக் கொண்ட பெற்றோருடன் வருகை தரும் 12 வயதிற்கு குறைவான பிள்ளைகள் கொவிட் பரிசோதனைகளில் இருந்து முழுமையாக விடுவிக்கப்படுவதுடன்,
12 வயது தொடக்கம் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் ஒரு தடுப்பூசிகளையேனும் பெற்றிருப்பார்களாயின் அவர்கள் பெற்றோருடன் விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுவர்.
கொவிட் -19 வைரஸ் அதி அவதானத்திற்குள்ளாகியுள்ள நாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகளை தனிமைப்படுத்துவது தொடர்பிலான தீர்மானம் அவர்களின் பரிசோதனை அறிக்கைகளுக்கு அமைய தீர்மானிக்கப்படும்.அதன்படி அவர்களின் தனிமைப்படுத்தல் காலம் 7 நாட்கள் தொடக்கம் 14 வரை மாறுப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர் 50000ஆயிரம் டொலர் காப்புறுதியை பெற்றிருத்தல் வேண்டும்.இலங்கையில் வசிக்கும் காலப்பகுதியில் கொவிட் -19 வைரஸ் தொற்றுக்குள்ளானால் வைத்தியசாலை சிகிச்சைக்கு காப்புறுதி ஊடாக செலுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM