ஆதிவாசி தலைவரின் ரிட் மனு விசாரணைக்கு ஏற்பு

Published By: Digital Desk 4

27 Jan, 2022 | 09:31 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

மஹியங்கனை - ரம்பக்கன் ஓயாவை  சூழ உள்ள ஆதிவாசிகளின் பூர்வீக காணிகளை மகவலி அதிகார சபையின் கீழ் கையகப்படுத்தி அதனை பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு சோளப் பயிர் செய்கை மேற்கொள்வதற்காக வழங்கப்படுவதை உடனடியாக நிறுத்துவதற்குரிய தடை உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி ஆதிவாசிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை  மேன் முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

ஆதிவாசி தலைவர் ஊருவரிகே உட்பட 44 பேருக்கு கொவிட் | தினகரன்

ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தோ மற்றும் சுற்றாடல் நீதிக்கான மையம், அதன் தலைவர் ஹேமந்த சிசிர குமார ஆகியோரால்  மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்  எழுத்தானை கோரி  தாக்கல் செய்யப்பட்டுள்ள  இந்த மனுவை எதிர்வரும்  ஏப்ரால் 5 ஆம் திகதி விசாரணைக்கு  எடுத்துக்கொள்ள மேன் முறையீட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை ( 27) தீர்மானித்தது.

அதன்படி மனுவின் பிரதிவதிகளான மத்திய சுற்றாடல் அதிகர சபை, அதன் பணிப்பாளர் நாயகம் பி.பீ. ஹேமந்த ஜயசிங்க, , வனஜீவராசிகள் திணைக்களம், அதன் பணிப்பாளர் நாயகம்,  மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, அதன்  பணிப்பாளர் நாயகம்  பி.ஏ. சுனில் எஸ். பெரேரா,  வனப்பாதுகாப்பு திணைக்களம், அதன் பணிப்பாளர் நாயகம் மற்றும் சட்ட மா அதிபர் உள்ளிட்டோருக்கு அன்றைய தினம் மன்றில் ஆஜராகி விளக்கமளிக்க அறிவித்தல் அனுப்புமாறு மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தர்விட்டது.

 மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகியோர் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தனர்.

முன்னதாக இந்த ரிட் மனுவானது  சட்டத்தரணி நில்மல் விக்ரமசிங்க ஊடாக  தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மஹியங்கனை, பொல்பெத்த - ரம்புக்கண் ஓயாவை அண்மித்து, தமது மக்கள்  பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்திய, வாழ்வாதாரத்துக்காக பாதுகாத்த வனத்தில், ஐயாயிரம் ஏக்கருக்கும் அதிக நிலப்பரப்பை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை கையகப்படுத்தி பாரியளவிலான சோளப் பயிர் செய்கைக்கு வழங்குவதாக குறித்த மனுவில் ஆதிவாசிகளின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதனால்  தமது வாழ்வாதாரம்  பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதகவும், ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலா எத்தோ மற்றும் சுற்றாடல் நீதிக்கான மையத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த ரிட் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த கையகப்படுத்தப்பட்ட  காணியை நிறுவனங்களுக்குப் பெற்றுக்கொடுப்பதனூடாக றம்புக்கன் ஓயாவுக்கு நீரை கொண்டு செல்லும் ஓடைக்கு சட்டவிரோதமான முறையில் தடை ஏற்படுத்தப்படுவதால் பாரிய சூழல் பாதிப்பும் ஏற்படக்கூடும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் உடனடியாக இந்த செயற்பாடுகளை தடுத்து நிறுத்துமாறும் அது தொடர்பில்  பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறும்  மனுதாரர்கள் பிரதான கோரிக்கையாக இம்மனுவூடாக கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08