இன்று (ஜனவரி 27) முதல் 2022 ஜனவரி 31 ஆம் திகதி வரை திட்டமிட்ட மின்வெட்டுக்கான அவசியமில்லை என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையினால் மின்வெட்டு தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனையை மீண்டும் இன்று பரிசீலணைக்கு எடுத்து கொண்டே போதே அவர் இந்த தகவலை அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,
நாங்கள் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் அவற்றிற்குத் தேவையான எரிபொருள் இருப்புக்களை தினசரி அடிப்படையில் மதிப்பாய்வு செய்கிறோம். அந்த மதிப்பாய்வுகளின் முடிவுகளின் அடிப்படையில் மட்டுமே மின் தடையின் அவசியத்தை நாங்கள் தீர்மானிக்கிறோம்.
கடந்த இரண்டு முறையும் மின்வெட்டு இல்லாமல் தடையில்லா விநியோகம் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தோம்.
அதன்படி இன்று முதல் ஜனவரி 31 ஆம் திகதி வரையிலான நிலவரத்தை இன்று ஆய்வு செய்தோம். அதற்கிணங்க 29 மற்றும் 30 ஆகிய வார இறுதி நாட்களில் மின் தடை அவசியமில்லை.
ஆகவே இந்த காலகட்டத்தில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறும், இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு ஆதரவளிக்குமாறும் நுகர்வோர் மற்றும் நிறுவனங்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
மின்சார நெருக்கடிக்குத் தீர்வாக அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான மின் உற்பத்தியாளர்களை வினைத்திறனாகப் பயன்படுத்துவதற்கான அமைப்பை உருவாக்கவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM