தனிமையிலிருந்த மூதாட்டியை கொலை செய்துவிட்டு தங்க ஆபரணங்கள் கொள்ளை

Published By: Vishnu

27 Jan, 2022 | 11:03 AM
image

சாய்ந்தமருது பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த 85 வயது மூதாட்டியை கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த தங்க  ஆபரணங்களை கொள்ளையர்கள் கொள்ளையடிச் சென்றுள்ள சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

சாய்ந்தமருது 15 பிரிவு புதுப்பள்ளி வீதியைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தாயாரான 85 வயதை உடைய சுலைமான் செய்யது புஹாரி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் என சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மூதாட்டி குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில், சம்பவதினமான இன்று காலையில் அவரது நான்காவது மகன் வழமைபோல காலை உணவை தாயாருக்கு கொண்டு சென்றபோது தயார் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

இதன் பின்னர் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதும் சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போதே மூதாட்டி தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் எவரும் இதுவரை கைதுசெய்யப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 10:39:31
news-image

3 நாட்களில் 167 வீதி விபத்துக்கள்;...

2024-04-16 10:28:57
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40
news-image

இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின்...

2024-04-16 09:19:55
news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52