340 கோடி பெறுமதியான ஹெரோயின் விவகாரம் : கைதான 17 பேரையும் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு 

Published By: Digital Desk 4

26 Jan, 2022 | 06:37 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

தெற்கு  சர்வதேச கடற்பிராந்தியத்தில் கைப்பற்றப்பட்ட  340 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 343 கிலோ 456 கிராம் நிறைக் கொண்ட  ஹெரோயின் தொகை தொடர்பில் இதுவரை 17 சந்தேக நபர்கள் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்கள் அனைவரும் இன்று ( 26) கொழும்பு பிரதான நீதிவான் புத்திக சி. ராகல முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், எதிர்வரும் 31 ஆம் திகதிவரை அவர்களை பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பில் தடுப்பில் வைத்து விசாரிக்க  உத்தரவிடப்பட்டது.

 இன்றைய தினம் சந்தேக நபர்களை மன்றில் ஆஜர் செய்த பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தின் அதிகாரிகள், குறித்த சந்தேக நபர்கள் போதைப் பொருட்களுக்கு மேலதிகமாக ஆயுதங்களையும் நாட்டுக்குள் கடத்தியுள்ளதாக தகவல்கள் உள்ள நிலையில், அது தொடர்பில் நீண்ட விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக தெரிவித்தனர். இந் நிலையிலேயே பொலிஸாரின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் சந்தேக நபர்களை இவ்வாறு தடுத்து வைத்து விசாரிக்க அனுமதியளித்தது.

இன்று சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்த போது, சந்தேக நபர்களில் உள்ளடங்கும் படகொன்றின் உரிமையாளர் ஒருவர், தனக்கு அஞ்சு எனும் பெயரிலான நபர் ஒருவர் தொலைபேசியில் கதைத்து குறித்த போதைப் பொருளை எடுத்துவருமாறு அச்சுறுத்தியதாக திறந்த மன்றில் தெரிவித்தார்.

 இந்த நிலையிலேயே இவ்வழக்கு எதிர்வரும் 31 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டது.

அரச புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருடன் இணைந்து கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, சந்தேகநபர்களுடன் ஹெரோயின் தொகை கைப்பற்றப்பட்ட நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு  பணியகத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜே.ஏ.யு. ஜயசிங்கவின் மேற்பார்வையில், அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சாமந்த ஜயசேகரவின் கட்டுப்பாட்டில் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின்  ஆலோசனைக்கு அமைய  பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ்  பரிசோதகர் லலித் ஜயசேகர தலைமையிலான  தனிப்படை விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51