ஊழல் மதிப்பாய்வு சுட்டியில் இலங்கை 102 ஆவது இடம்

Published By: Vishnu

26 Jan, 2022 | 08:30 AM
image

(ஜெ.அனோஜன்)

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் (TI) சர்வதேச நிறுவனத்தினால் தொகுக்கப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான ஊழல் மதிப்பாய்வுச் சுட்டியில் இலங்கை 102 ஆவது இடத்‍தை பிடித்துள்ளது.

CPI2021_Map_Twitter EN

ஒரு தசாப்தகாலமாக ஊழல் நிலையில் எவ்வித முன்னேற்றகரமான மாற்றங்களையும் அடையிவில்லை என்பதை 2021 ஆம் ஆண்டிற்கான ஊழல் மதிப்பாய்வுச் சுட்டி வெளிப்படுத்துகின்றது

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் (TI) சர்வதேச நிறுவனத்தினால் தொகுக்கப்பட்ட சமீபத்திய ஊழல் மதிப்பாய்வுச் சுட்டியானது (CPI) (CORRUPTION PERCEPTIONS INDEX) இன்று வெளியிடப்பட்டது. 

CPI ஆனது, உலகெங்கிலுமுள்ள 180 நாடுகள் மற்றும் ஆட்சி எல்லைக்குள் இடம்பெறுகின்ற பொதுத் துறை ஊழல்களின் அடிப்படையில் மதிப்பாய்வு செய்யப்படுகின்றது. 

இங்கு வழங்கப்பட்ட புள்ளிகளானது நிபுணர்களின் கருத்துக்களையும் வர்த்தக சமூகத்தினரின் கருத்துக் கணிப்புக்களையும் பிரதிபலிக்கிறது. 

உலக வங்கி, உலகப் பொருளாதார மன்றம் (WEF), தனியார் இடர் மற்றும் ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள், சிந்தனைக் குழுக்கள் உட்பட 13 வெளிவாரியான தரவுகளை பயன்படுத்தியே CPI மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. 

CPI மதிப்பாய்வானது அதன் புள்ளி வழங்கும் முறையினை 0 தொடக்கம் 100 வரை வடிவமைத்துள்ளது. 100 புள்ளிகள் என்பது ஊழலற்ற தூய்மையான நிலையினையும் 0 புள்ளி என்பது கூடிய ஊழல் நிலையினையும் குறிப்பிடுகிறது.

2021 ஆம் ஆண்டிற்கான CPI மதிப்பாய்வில் இலங்கைக்கு 37 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. இது முன்னைய ஆண்டினை விட ஒரு புள்ளி குறைவானதாகும் (38). அதனடிப்படையில் தரவரிசையில் 2020 ஆம் ஆண்டு 94 ஆம் இடத்திலிருந்த இலங்கை 2021 ஆம் ஆண்டு 102 ஆம் நிலைக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. 

கடந்த 10 ஆண்டுகளில் இலங்கையின் CPI மதிப்பாய்வானது ஒப்பீட்டளவில் ஒரே மாதிரியாகவே காணப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு பதிவாகிய 36 புள்ளிகள் குறைந்த மதிப்பீடாகவும் 2012 ஆம் ஆண்டு பதிவாகிய 40 புள்ளிகள் இலங்கையின் அதிகபட்ச புள்ளியாகவும் விளங்குகிறது.

ஊழல் மதிப்பாய்வுச் சுட்டியில் பொதுத்துறை ஊழல் வகைகளாக இலஞ்சம், பொது நிதியின் தவறான பயன்பாடு, ஊழல் தொடர்பிலான வழக்குகளை திறம்பட விசாரணை செய்யும் தன்மை, போதுமான சட்ட கட்டமைப்புக்கள், தகவல் அணுகுவதற்கான வாய்ப்பு மற்றும் முறைகேடுகளை வெளிப்படுத்துவோர், ஊடகவியலாளர்கள் மற்றும் புலனாய்வாளர்களுக்கான சட்டப் பாதுகாப்புகளின் தன்மை என்பனவே உள்ளடக்கியுள்ளது.

இலங்கையின் ஊழலுக்கெதிரான ஒட்டுமொத்த செயற்பாடுகளும் ஸ்தம்பித நிலையிலேயே காணப்படுவதாகவும் கடந்த 10 ஆண்டுகளில் 86 சதவீதமான உலக நாடுகளில் ஊழலுக்கெதிராக எந்த முன்னேற்றமும் அடையப்படாத நிலைமையே காணப்படுவதாக ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் நிறுவனம் குறிப்பிடுகிறது.

சுதந்திரத்தினை கட்டுப்படுத்தல் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாட்டிலிருந்து விலகுதல் போன்ற அடிப்படை விடயங்களிலிருந்து விடுபட உலகளாவிய கோவிட்-19 தொற்றுப்பரவலை உலகிலுள்ள பல நாடுகள் தமக்கு சாதகமாக பயன்படுத்துகிறது என ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் நிறுவனம் குறிப்பிடுகிறது. அது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், அநாமதேயமான ஷெல் நிறுவனங்களின் (Shell) துஷ்பிரயோகங்களை தடுப்பதற்காக சர்வதேசத்தின் வேகம் அதிகரித்துள்ள போதிலும் ஒப்பீட்டளவில் “தூய்மையான” பொதுத் துறைகளைக் கொண்ட அதிகப்படியான புள்ளிகளை பெற்ற பல நாடுகள் கடல்கடந்த ஊழல்களை தொடர்ந்தும் செயற்படுத்துகின்றன.

CPI மதிப்பாய்வில் அதிக மற்றும் குறைந்த புள்ளிகளை பெற்ற நாடுகளின் வரிசை, டென்மார்க் (88), பின்லாந்து (88), நியூசிலாந்து (88) அதேபோல் சோமாலியா (13) தென் சூடான் (11).

 ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனமானது ஊழலுக்கு எதிராகவும் நல்லாட்சியை மேம்படுத்துவதன் மூலம் ஊழலற்ற நாட்டை கட்டியெழுப்ப சர்வதேச ரீதியாக செயற்படும் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் (TI) சர்வதேச நிறுவனத்தின் உள்நாட்டு அமைப்பாகும். 

அதேவேளை மேற்குறிப்பிட்டவாறு இவ் CPI வருடாந்த ஆய்வுக்காக ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் (TI) நிறுவனத்தினால் இலங்கை தொடர்பிலான தரவுகள் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனத்திற்கு வெளியே பெறப்பட்டவையாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56