இன்று மின்வெட்டு இல்லை - காமினி லொக்குகே

Published By: Vishnu

24 Jan, 2022 | 04:49 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை தொடர்ந்து மின் விநியோகத்தை துண்டிக்காமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என  மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.

அத்துடன் மின்விநியோகத்தை திட்டமிட்டு துண்டிக்கும் தரப்பினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மின்சாரத் துண்டிப்பு குறித்து இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு தேவையான டொலரை விநியோகிக்குமாறு ஜனாதிபதி மத்திய வங்கிக்கு ஆலோசனை இந்த சந்திப்பின்போது ஆலோசனை வழங்கினார்.

அதற்கமைய 35000 ஆயிரம் மெற்றிக்தொன் பெற்றோல் மற்றும் 37,500 மெற்றிக்தொன் டீசல் அடங்கிய கப்பலுக்கு டொலர் செலுத்த மத்திய வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபைக்கு தேவையான எரிபொருளை தடையில்லாமல் விநியோகிக்க வலுசக்தி அமைச்சும்,பெற்றோலிய கூட்டுத்தாபனமும் இணக்கம் தெரிவித்துள்ளது.

தேசிய மின்விநியோக கட்டமைப்பில் காணப்படும் பிரச்சினைகள், மின்நிலையங்கள் செயலிழத்தல் தொடர்பில் ஒரு வார காலத்திற்குள் தீர்வு காணுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் என்றார்.

சபுகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டதை தொடர்ந்து நாடு தழுவிய ரீதியில் மின் விநியோகத்தை நான்கு கட்டங்களாக துண்டிக்க நேரிடும் என மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தினர் இன்று குறிப்பிட்டனர்.

மாலை 5.30 மணிமுதல் இரவு 9.30 வரையான காலப்பகுதியில் மின்துண்டிப்பை அமுல்படுத்த ஆரம்பத்தில் கூறியமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33