சமூகத்தில் எமக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்த ஆசான்களுக்கு எமது வாழ்த்துக்கள்.!

Published By: Robert

06 Oct, 2016 | 12:05 PM
image

‘ஞான விளக்­குகள்’ என விளிக்­கப்­பட்டு மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரி­சையில் தெய்­வத்­திற்கும் முதற்­ப­டி­யாக கரு­தப்­ப­டு­கின்ற ஆசி­ரி­யர்கள் மதிக்­கப்­பட வேண்­டி­ய­வர்கள். போற்­றப்­படும் ஆசி­ரி­யத்­துவம் என்­பது மிகவும் புனி­த­மா­னது. ஆசு (மாசு) நீக்கி, அறி­யாமை இருள் அகற்றி, அறி­வென்னும் ஒளிபரப்பும் ஞான விளக்­கு­களே ஆசி­ரி­யர்கள் என சுவாமி விவே­கா­னந்தர் ஆழ­மாக, அழ­காகக் கூறி­யுள்ளார். பல்­வேறு கல்விச் சிந்­த­னை­யா­ளர்­க­ளான ஜோன்­டூஜி, பிளட்டோ, காந்­தி­ய­டிகள், விவே­கா­னந்தர் போன்ற பல­ரி­னதும் கருத்­துக்­களின் படி கல்வி என்­பது ஒரு  பிள்­ளையின் (ஒரு­வரின்) அறிவு, திறன், மனப்­பாங்கு, தேர்ச்­சிகள் என்­ப­வற்றை விருத்­தி­ய­டையச் செய்து சமூகம் காண விழை­கின்ற சான்­றோனை (நற்­பி­ர­ஜையை) உரு­வாக்­கு­வது என்­பதே அடிப்­ப­டை­யான கருத்­தாகும். புனி­த­மாக போற்­றப்­ப­டு­கின்ற ஆசி­ரிய சேவையை புரி­கின்ற ஆசி­ரி­யர்கள் தமது சேவையில் வெற்றி பெறு­வ­தற்கு பல உன்­ன­த­மான காரி­யங்­களில் சிறந்து விளங்க வேண்­டி­யது இன்­றி­ய­மை­யா­த­வை­யாக உள்­ளன. 

மாணவச் செல்­வங்­களில் பற்றும் பாச­மும் வைத்து அர்ப்­ப­ணிப்­புடன் தொழிற்­ப­டும்­போது இதனால் கிடைக்­கின்ற  மன நிறைவு மகத்­தா­ன­தா­கவே இருக்கும். ஆசி­ரி­யர்கள் சேவை­க­ளுக்­கெ­னவே பிறந்­த­வர்கள் என்றும் ஆசி­ரி­யர்கள் உரு­வாக்­கப்­ப­டு­கி­றார்கள் என்னும் கருத்­துக்­களும் வாதப் பிர­தி­வா­தங்­களும் உள்ள போதும் ஆசி­ரி­யர்­களின் மகத்­தான சேவை­யா­னது வெற்­றி­யுடன் வளர வேண்­டு­மெனில் ஆசி­ரி­யர்கள் பின்­வ­ரு­வ­ன­வற்றில் மிகுந்த கவனம் செலுத்­துதல் அவ­சி­ய­மாகும் அவை­யா­வன: 

தங்­க­ளது வாண்­மையை விருத்தி செய்து கொள்­ளுதல், முன் மாதி­ரி­யா­ன­வர்­க­ளாக திகழ்தல்.

 வகுப்­ப­றையில் பிள்­ளையை அறிதல் என்­ப­வற்றில் கூடிய கவனம் செலுத்தல் வேண்டும்.

வாண்மை விருத்­தியைப் பற்றி நோக்­கும்­போது கல்­வி­யா­னது வரை­ய­றை­யற்­றது, கருவில் இருந்து கல்­ல­றை­வரை கல்வி தொடர்ச்­சி­யு­டையது என்­பார்கள். இதன்­படி ஆசி­ரி­யர்கள் என்போர் என்றும் கற்றுக் கொண்­டி­ருப்­ப­வ­ராக, நவீன உலகின் மாற்­றங்கள், சவால்கள், போட்­டிகள், வியத்­தகு வளர்ச்­சிகள் என்­ப­வற்­றிற்கு முகம் கொடுக்கக் கூடி­ய­வர்­க­ளாக புதி­ய­ன­வற்றை தேடி அறியும் ஆவல் உள்­ள­வர்­க­ளா­கவும் இருத்தல் வேண்டும். தமது பாடங்கள் தொடர்­பான போதிய அறிவும் அவை  தொடர்­பான செய­ல­மர்­வு­களில் கலந்து கொள்­ளுதல், அறிவை பகிர்ந்து கொள்­ளுதல் என்­ப­வற்­றுடன் சிறந்த மொழி அறி­வுகள், தொடர்­பாடல் திறன்கள் என்­ப­வற்­றையும் வளர்ப்­ப­துடன் தொடர்ச்­சி­யான கற்றல் நட­வ­டிக்கை மூலம் தம்மை வளர்ப்­ப­வர்­க­ளாக திகழ வேண்டும்.

முன்­மா­தி­ரி­யா­ன­வர்­க­ளாக நடந்து கொள்­ளுதல் என்­பதை ஆசி­ரி­யர்­க­ளி­டத்தே நோக்­கும்­போது தாம் கட­மை­யாற்றும் பாட­சா­லை­க­ளுக்கு பாட­சாலை ஆயத்த மணி அடிப்­ப­தற்கு முன்­பாக பாட­சாலை  சென்­ற­டைதல் என்­பது கூட முன்­மா­தி­ரி­யான நடத்­தையின் ஆரம்­ப­மாகும். இது மட்­டு­மல்ல. ஆசி­ரி­யர்­களின் முன்­மா­தி­ரி­யான நடத்தை செயற்­பா­டுகள் பல­வுள்­ளன. தமது பேச்சு, சொல் செயற்­பா­டுகள், நடத்­தைகள், அணிந்­து­கொள்ளும் ஆடைகள், சிகை அலங்­காரம், ஆடை­களை அணிந்து கொள்ளும் முறைகள், நட்­பு­றவை பேணுதல், அற­நெறி ஒழுக்க  விழு­மி­யங்­களைக் கடைப்­பி­டித்தல், அர்ப்­ப­ணிப்பு மனப்­பாங்கு வளர்த்தல், கட­மை­களைப் பொறுப்­பேற்றல், பெற்றுக் கொண்ட, வழங்­கப்­பட்ட பொறுப்­புக்கள், கட­மை­களை நேர்த்­தி­யா­கவும் சிறப்­பா­கவும் செய்து முடித்தல், விடு­முறைகள் எடுப்­பதை இயன்­ற­வரை குறைத்துக் கொள்­ளுதல் வகுப்­ப­றைக்கு நேரத்­துடன் சமுக­ம­ளித்தல், சமூ­கத்­து­டனும் சமூக நிறு­வ­னங்­க­ளு­டனும் நட்­பு­ற­வுடன் பழ­குதல், சிறந்த கூட்­டு­றவை வளர்த்து நம்­பிக்­கை­யுள்­ள­வர்­க­ளாக திகழ்தல், மூத்­தோரை மதித்தல்.

தமது நட­வ­டிக்­கை­களில் சொல்­வதும் செய்­வதும் ஒன்­றாக இருத்தல், பாட­சாலை நிர்­வா­கத்­து­டனும் சக ஆசி­ரி­யர்­க­ளு­டனும் சிறப்­பான நட்­பு­றவைப் பேணுதல், தமது கட­மையை பாட­சாலை முதல்­வரை திருப்திப்படுத்­து­வ­தற்­காக செய்­வ­தாக கரு­தாது தமது  மன­சாட்­சிக்கு விரோதம் இல்­லாத வகையில் பாட­சாலை முதல்­வரின் ஆசனம் வெற்­றி­ட­மாக இருந்­தா­லும்­கூட ஆசி­ரி­யர்கள் தமக்­கு­ரிய கட­மை­களை எதிர்­கால சந்­த­தி­யி­னரின் நன்மை கருதி அர்ப்­ப­ணிப்­புடன் சேவை புரி­ப­வர்­க­ளாக தம்மை வளர்த்­தெ­டுக்க வேண்டும். இப்­ப­டி­யான சேவை புரியும் ஆசி­ரி­யர்­க­ளுக்கு இறை­வனின் ஆசி என்­றுமே இருக்கும் என்­பது உண்­மை­யாகும்.

அடுத்து, வகுப்­ப­றையில் பிள்­ளையை அறிதல் என்­பதைக் கருதும் போது வகுப்­பறை கற்­பித்தல் நட­வ­டிக்­கை­க­ளுக்­காக அர­சினால் தயா­ரிக்­கப்­ப­டு­கின்ற பாடத் திட்­டங்கள், அறி­வு­ரைப்பு வழி­காட்­டிகள், வருடா வருடம் மாற்­ற­ம­டை­வது இல்லை. ஆனால் ஒவ்­வொரு வரு­டமும் குறிப்­பிட்ட வகுப்­ப­றையில் பிள்­ளைகள் (மாண­வர்கள்) மாறிக் கொண்டே இருப்­பார்கள் என்­பதும் ஒரு வகுப்பின் வெவ்­வேறு பிரி­வு­களில் கூட மாண­வர்கள் வேறு­பட்ட திற­மை­க­ளுடன் இருப்­பார்கள் என்­பதும் குறிப்­பிட்ட ஒரு பிரிவில் கூட கல்வி கற்கும் மாண­வர்­க­ளுக்கு இடை­யி­லுமே பல வேறு­பா­டுகள், மாற்­றங்கள் இருக்கும் என்­பதில் ஐய­மில்லை.

எனவே, ஒரு ஆசி­ரியர் தான் தன் துறை­சார்ந்த பாடப் பரப்பில் போதி­ய­ளவு புலமை, திறமை இருந்தால் மட்டும் கற்றல், கற்­பித்தல் செயற்­பாட்டை வினைத்­தி­ற­னு­டை­ய­தாக மாற்ற முடி­யாது. பாடப் புல­மைசார் திற­னுடன் “பிள்­ளையை அறிதல்” என்­பது இன்­றி­ய­மை­யா­தது. பிள்­ளையை அறிந்து பிள்­ளையின் மனப்­பாங்கில் கற்­றலில் நாட்­டமும் ஆர்வம் வர செய்­வதன் மூலம் ஓர் ஆசி­ரியர் வெற்­றி­ய­டை­கின்றார் என்றால் மிகை­யல்ல. வகுப்­பி­லுள்ள வெவ்­வேறு பிள்­ளையும் தனியாள் வேறு­பாடு உடை­ய­வர்கள் மட்­டு­மல்ல அவர்­க­ளின குடும்ப, பொரு­ளா­தார, சமய, கல்விப் பின்­ன­ணி­களும் வேறு­பட்­ட­வையாக இருக் முடியும் பிள்­ளையை அறிதல் என்­பதில் தனி­யாக பிள்­ளையின் பெயரை மட்டும் அறிதல் என்­பது அர்த்­த­மல்ல, இங்கே பல்­வேறு அறிக்­கைகள் அடங்­கி­யுள்­ளன. எவ்­வா­றா­யினும் வகுப்­பி­லுள்ள ஒவ்­வொரு மாண­வர்­க­ளையும் ஆசி­ரியர் அவர்­களின் பெயரைக் கூறி அழைப்­ப­வ­ராக இருத்தல் வேண்டும். அத்­துடன் பிள்­ளை­களின் குடும்ப விவரம், பெற்­றோரின் தொழில், பொரு­ளா­தா­ரங்கள், உடல் ஆரோக்­கி­யங்கள் போன்ற பல விவ­ரங்­களை ஆசி­ரியர் அறிந்­தி­ருப்­பது நல்­ல­தாக அமையும். இங்கே சில விவரங்­களை மாண­வர்­க­ளிடம் கேட்கும் போது மிகவும் அவ­தா­ன­மாக ஆசி­ரியர் நடந்து கொள்­ளுதல் வேண்டும். சில தக­வல்­களை மாண­வர்கள் சக மாண­வர்கள் முன்­னி­லையில் கூற­வும் மாட்­டா­ர்கள். அவ்­வா­றான சில தக­வல்­களை ஆசி­ரியர், சக மாண­வர்­களின் முன்­னி­லையில் வின­வு­த­லையும் தவிர்த்துக் கொள்­ளுதல் வேண்டும். மாண­வர்­களின் அப்­பி­யாசக் கொப்­பி­களை தனித் தனி­யாக அழைத்து திருத்தும் வேளைகள், சந்­திக்கும் விளை­யாட்டு மைதா­னங்கள் போன்ற சந்­தர்ப்­பங்கள், இன்­னோ­ரன்ன சந்­தர்ப்­பங்­களில் பிள்­ளை­க­ளிடம் அவர்­களை அறி­யா­ம­லேயே தக­வல்­களை பெற கூடி­ய­தான உள­வியல் அணு­கு­மு­றை­களை கையா­ளுதல் வேண்டும்.

பிள்­ளை­களின் பின்­ன­ணி­களை அறிந்த பின்பு அவர்­க­ளுக்கு ஏதா­வது உத­விகள், ஆறு­தல்கள் வழங்கும் சந்­தர்ப்­பங்­களில் சக மாண­வர்­க­ளுக்கு தெரியா வண்ணம் அந்த உத­வி­களை மேற்­கொள்­வதே சிறந்­தது. மேலும் ஒரு சிறந்த ஆசி­ரியர் என்­பவர் பல்­வேறு நடி­பங்­கு­களை ஏற்­ப­வ­ராக இருத்தல் வேண்டும். தாயாக, தந்­தை­யாக, தாதி­யாக, நண்­ப­னாக, நடி­க­ராக, வழி­காட்­டி­யாக என பல பாத்­தி­ரங்­களை ஏற்று சேவை புரி­யும்­போது மாண­வர்கள் ஆசி­ரி­யர்­களை கூடி­ய­ளவில் நேசிப்­ப­துடன்  தமது தனிப்­பட்ட  குறை,  நிறை­களைக் கூட ஆசி­ரி­யர்­க­ளிடம் கூறி சிறந்த தீர்வைப் பெற்று நடக்கக் கூடி­ய­வர்­க­ளாக மாறு­வார்கள். அத்­துடன் வகுப்­ப­றையில் மாண­வர்­க­ளிடம் பகிர்ந்து கொள்ளும் வார்த்தைப் பிர­யோ­கங்­க­ளிலும் கவ­ன­மாக இருத்தல் வேண்டும். எந்த ஒரு பிள்­ளை­யையும் “மொக்கு” என்று பேசு­வதை முற்­றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பிள்­ளை­யிடம் ஒரு திறன் இல்­லா­விட்டால் இன்­னொரு திறன் மேலா­ன­தாக இருக்க முடியும் மேலும் தேர்­வுகள், போட்­டிகள், மதிப்­பீ­டு­களில் பின்­தங்கி நிற்கும் மாண­வர்­க­ளையும் ஆசி­ரி­யர்கள் தமது அன்­பான பேச்­சுக்­க­ளி­னாலும் அர­வ­ணைப்­பி­னாலும் முன்­னி­லைக்கு வரச்செய்ய முடியும். போட்டி ஒன்றில் சற்று பின்­தங்­கிய பிள்­ளை­யிடம் உன்னால் முடியும். முயற்சி செய்தால் அடுத்த தடவை வெற்றி பெற முடியும் என்றும் பரீட்­சையில் குறைந்த புள்­ளி­களை பெற்ற பிள்­ளை­யிடம் இந்த பயிற்­சி­களை மீண்டும் மீண்டும் செய்து பயிற்­சி­ய­டை­வ­துடன் இன்னும் கவனம் எடுத்தால் அடுத்த பரீட்­சையில் அதிக புள்­ளி­களை பெற முடியும் என்றும் பேச்சுப் போட்டி ஒன்றில் பங்­கு­பற்றி வெற்றிச் சந்­தர்ப்­பத்தை இழந்த பிள்­ளை­யிடம் உங்கள் பேச்சு நன்­றாக இருந்­தது, எனினும் சில விட­யங்­களை எடுத்­துக்­காட்டி இவற்றில் கூடிய கவ­ன­மெ­டுத்தால் இனி­வரும் போட்­டி­களில் இடம் கிடைக்க முடியும் என்ற பல உற்­சா­கப்­ப­டுத்தும் உபா­யங்­களைக் கூறி மாண­வர்­களைத் தட்டிக் கொடுத்து இவர்­களை உற்­சா­கப்­ப­டுத்­து­ப­வர்­க­ளாக  இருத்தல் வேண்­டுமே  தவிர இந்த மாண­வர்­க­ளினால் ஒன்­றுமே முடி­யாது என்ற நிலையில் இருத்தல் கூடாது. 

இலை­மறை காய்­க­ளாக மாண­வர்­க­ளிடம் மறைந்­தி­ருக்கும் உள்­ளார்ந்த திறன்­களை வளர்த்­தெ­டுத்து அவர்­களை வெற்­றிப்­ப­டி­களின் உச்­சத்­திற்கு உயர்த்­து­வ­திலும் அறிவில் கரை­காண வைப்­ப­திலும் நல்­லா­சி­ரியர் ஏணி­யா­கவும் தோணி­யா­கவும் தொழிற்­ப­டுவார் என்றால் மிகை­யில்லை.

இந்த வகை­களில் நோக்­கும்­போது ஆசி­ரியர் என்­பவர் தனது சிறப்­பான சேவை­களின் மூலம் ஒரு பிள்ளை (மாணவர்) மனப்­பாங்கில் நேரான மாற்­றங்­களை உண்­டு­பண்ணி மாண­வனை நாளாந்தம் பாட­சா­லைக்கு வெறுப்­பின்றி விருப்­புடன் சமு­க­ம­ளித்து கற்றல்– கற்­பித்தல் செயற்­பா­டு­களில் சுமு­க­மாக ஈடு­பட வைத்தார் என்றால் இந்த ஆசி­ரியர் தனது சேவையில் வெற்றி கண்­ட­வ­ரா­கவே கரு­தப்­ப­டுவார். மாணவச் செல்வங்களினால் இவர்கள் மதிப்புடன் போற்றப்படுவார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.

பண்பும் பணிவும் மிக்க ஒழுக்கமுள்ள நற்பிரஜைகளை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு இன்றியமையாததே. மாவீரன் நெப்போலியன் கூறியது போல “உன்னால் முடியாதது என்று ஒன்றுமில்லை” என்று மாணவர்களை உற்சாகப்படுத்துங்கள். அணுவிஞ்ஞானி அமரர் டாக்டர் அப்துல் கலாம்  கூறியதுபோல மாணவர்களின் சிந்தனை சக்தியை தூண்டி அவர்கள் வளர்ச்சிப் பாதையில் “கனவு காண வையுங்கள்” மேலும் அவர் கூறியது போல “’மனிதனின் பிறப்பு ஒரு சந்தர்ப்பமாக இருந்தாலும் இறப்பு சரித்திரமாக அமைய வேண்டும்” என்பதற்கேற்ப ஆசிரியர்கள் தமது அர்ப்பணிப்பான சேவையின் மூலம் சரித்திர நாயகர்களாக போற்றப்படுவீர்கள். ஏழு பிறப்பிற்கும் “ஞானவிசைக்குகனாகவே” அணையாத தீபங்களாக ஒளி வீசுவீர்கள் என்பதில் ஐயமில்லை.  “கல்வியே கண்”

முக்கிய செய்திகள்

icon-left
icon-right