பாலியல் செயற்பாடுகளுக்கு விரும்புவதாக முதியவரை ஏமாற்றி உடமைகள் கொள்ளை - கர்ப்பிணி யுவதியும், இளைஞனும் கைது

Published By: Digital Desk 4

23 Jan, 2022 | 05:41 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

பாலியல் செயற்பாடுகளுக்கு விரும்புவதாகவும்,  தான் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்வதாகவும்  கூறி வயோதிபர் ஒருவரை ஏமாற்றி  அழைத்து சென்று  அவரிடமிருந்த பணம்,  கையடக்கத் தொலைபேசி,  வங்கி அட்டை உள்ளிட்ட உடமைகளை கொள்ளையிட்டதாக கூறப்படும்  கர்ப்பிணியான யுவதி ஒருவரையும் இளைஞர் ஒருவரையும்  களனி - பிலபிட்டிய பகுதியில் வைத்து பேலியகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 253 பேர் கைது! - Real Tamil  News

குறித்த சந்தேக நபர்களைக் கைது செய்யும் போது அவர்களிடம் இருந்து  10 கிராம் 425 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளும் மீட்கப்பட்டதாக  பேலியகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

 அண்மையில் குறித்த சம்பவம் தொடர்பில் வயோதிபர் ஒருவர்  பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.  

தனது பாலியல் தேவையை பூர்த்தி செய்வதாக தன்னை ஏமாற்றி தனது உடமைகள் கொள்ளையிடப்பட்டதாக குறித்த முதியவர் அளித்த முறைப்பாட்டுக்கு அமைய  பேலியகொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர்  களுவித்தாரணவின் அலோசனைக்கு அமைய குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்  கசுன் சுபாஷ் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அந்த விசாரணைகளிலேயே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 பொலிசாரின் தகவலுக்கமைய,  கடந்த  17 ஆம் திகதி குறித்த முதியவரிடம் பாலியல் தேவையை பூர்த்தி செய்வதாக கர்ப்பிணியான 26 வயதான யுவதி விருப்பம் தெரிவித்து அவரின் சம்பதத்தை பெற்றுள்ளார். அதன் பின்னர் அந்த யுவதியை முதியவர் பேலியகொடை பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு அழைத்து செல்ல முற்பட்ட வேளை, தன்னால்  வெகு தூரம் வர முடியாது எனவும் கணவருக்கு  தெரியாமலேயே தான் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகவும் கூறி தனக்கு தெரிந்த கிட்டிய தூரத்தில் உள்ள ஓர் இடத்துக்கு செல்லலாம் என  அந்த யுவதி முதியவரை அழைத்து சென்றுள்ளார்.

 அதன்படி பேலியகொடை -  மேவெல்ல  பகுதியில் ஆற்றினை அன்மித்த பகுதியொன்றுக்கு முதியவரை அப்பெண் அழைத்து சென்றுள்ளார்.  அதன்போது அங்கு வந்துள்ள இளைஞன் தனது மனைவியுடன்  பாலியல் தொடர்பினை கொண்டிருப்பதாக முதியவரை தாக்கி, அவரின் உடமைகளையும் கொள்ளையிட்டு யுவதியுடன் அங்கிருந்து சென்றுள்ளார்.

 இவ்வாறு முதியவரை தாக்கிய இளைஞன், குறித்த யுவதியின் கள்ளக் காதலன் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 இந் நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த இருவரும் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும்,  யுவதி எகலியகொட பகுதியையும், இளைஞன் பேலியகொடை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிசார் கூறினர்.

 மேலதிக விசாரணைகளில்,  இவ்விருவரும் இதனை ஒத்த குற்றச் செயல்களில் இதற்கு முன்னர் ஈடுபட்டுள்ளமையும், அவ்வாறான 10 சம்பவங்கள் தொடர்பில் தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும்  பொலிஸார் கூறினர்.  இருவருமே விளக்கமறியலிலும் இருந்துள்ளதாக கூறும் பொலிசார், இருவரில் இளைஞனுக்கு எதிராக  7 திறந்த பிடியாணைகளும் யுவதிக்கு எதிராக 5 திறந்த பிடியாணைகளும்  புதுக்கடை மற்றும் மஹர நீதிமனறங்கள் ஊடாக பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும்   கூறினர்.

 இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணைகளை பேளியகொடை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் காணி மக்களுக்கே சொந்தம் -...

2025-02-13 03:11:18
news-image

இழப்பீட்டுக்கான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளமை மகிழ்ச்சிக்குரியது...

2025-02-12 18:15:45
news-image

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா?...

2025-02-12 18:23:26
news-image

யாழ்ப்பாணத்தில் பழைய அரசியல் கலாசாரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது...

2025-02-12 18:13:39
news-image

இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஒரகல் நிறுவனம்...

2025-02-12 21:15:49
news-image

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் தையிட்டி சட்டவிரோத...

2025-02-12 21:11:13
news-image

இழப்பீட்டுத் தொகை குறித்து பேசும் ஆளும்...

2025-02-12 18:05:05
news-image

ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தை தற்காலிகமாக...

2025-02-12 18:23:50
news-image

உலக காலநிலை பிரச்சினைகளை முகங்கொடுக்க உலகளாவிய...

2025-02-12 19:49:02
news-image

தமிழக மீனவர்கள் நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு...

2025-02-12 18:22:25
news-image

எமது ஆட்சியில் மின்துண்டிப்புக்கு மின்சார சபையின்...

2025-02-12 18:24:55
news-image

பாடசாலை பிரதி அதிபரின் விடுதியில் திருட்டு...

2025-02-12 18:18:16