தேசிய அடையாள அட்டையை டிஜிட்டல் மயப்படுத்த இந்தியாவுடன் இணைந்து முயற்சி - நாமல்

Published By: Digital Desk 3

21 Jan, 2022 | 07:58 PM
image

(ஆர்.யசி)

தேசிய அடையாள அட்டையை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டத்தை இந்தியாவுடன் இணைந்து முன்னெடுக்க முயற்சிக்கின்றோம். இப்போதும் அதற்கான ஒத்துழைப்பை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது என அமைச்சர் நாமல் ராஜபக் ஷ சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21)  இடம்பெற்ற, ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான மூன்றாம் நாள் சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு சவால் விடுத்த அவர் மேலும் கூறுகையில்,

கொவிட் வைரஸ் காரணமாக எமக்கு வரவிருந்த வருவாய்கள் முடக்கப்பட்டன, வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறைவடைந்தது, சுற்றுலா முழுமையாக தடைப்பட்டது. இவ்வாறான நிலையில் தான் தடுப்பூசியை வழங்கியதன் மூலமாக இந்த சவால்களை வெற்றிகொள்ள முடிந்துள்ளது.

இன்று சுற்றுலாத்துறை பலமடைந்து வருகின்றது. தென்னாசிய நாடுகளில் முதல் நாடாக கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளை நடந்தியுள்ளோம். எனினும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. 

அரச வருமானம் வீழ்ச்சி கண்டுள்ளது. மக்களுக்கு ஐந்தாயிரம் ரூபா நிவாரணம் வழங்க வேண்டியுள்ளது. மூன்று சந்தர்ப்பங்களில் நிவாரண பணம் வழங்கியுள்ளோம். இலவசமாக தடுப்பூசி ஏற்றப்படுகின்றது. இதற்கான செலவுகளை  அரசாங்கம் தாங்கிக்கொள்ள வேண்டியுள்ளது.

உலக நாடுகள் பல இன்றும் உணவு நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருகின்றன, எம்மை போன்றே பல நாடுகள் இந்த சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றன. 

இறக்குமதியை முன்னெடுக்க முடியாது பல நாடுகள் தடுமாறிக்கொண்டுள்ளன. நாமும் இதே சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றோம். இன்று நாட்டில் மீண்டும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. 

தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்றது. அதன் மூலமே வேலைவாய்ப்புகளை பலப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடியும். அதுவே எமது இலக்காகும். 

நட்பு நாடுகளுடன் நாம் நெருக்கமாக செயற்பட்டுக்கொண்டுள்ளோம். வெவ்வேறு நாடுகளின் தலைவர்கள் அமைச்சர்கள் எமது நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

மக்கள் கஷ்டத்தில் வாழ்கின்றனர், கிராமங்களில் பிரச்சினைகள் உள்ளன. கொவிட் வைரஸ் காரணமாக பல்வேறு நெருக்கடிகளுக்கு நாம் முகங்கொடுத்துள்ளோம்.

எனினும் விரைவில் இந்த சவால்களில் இருந்து மீள முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. அதேபோல் டிஜிட்டல் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து அபிவிருத்தியின் பக்கம் நாட்டை கொண்டு செல்கின்றோம்.

மக்களுக்கு தமது கடமைகளை இலகுபடுத்த டிஜிட்டல் தளத்தை பலப்படுத்தி வருகின்றோம். 30 மாதங்களுக்குள் டிஜிட்டல் வேலைத்திட்டங்களை முழுமைப்படுத்த நடவடிக்கை எடுப்போம்.

அதேபோல் இந்தியாவுடன் இணைந்து தேசிய அடையாள அட்டையை டிஜிட்டல் மயப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முயற்சிக்கின்றோம். இப்போதும் அதற்கான ஒத்துழைப்பை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது. 

கடவுச்சீட்டு, அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட அனைத்தையும் ஒரு கோப்பாக மாற்றும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். இது குறித்த சட்ட திட்டங்களை அமைச்சரவையில் அங்கீகரித்துள்ளோம். விரைவில் பாராளுமன்றத்தில் இதனை முன்வைப்போம்.   

அதேபோல் இன்று நாம் சகலரும் தேசிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருகின்றோம். இதனை சகலரும் ஒன்றிணைந்து வெற்றிகொள்வோம், அதன் பின்னர் தேர்தலில் எமது அரசியலை முன்னெடுக்க முடியும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகநீதி உலகரீதியில் பலம் வாய்ந்த நாடுகளின்...

2023-12-10 11:43:47
news-image

கடன் செலுத்தும் காலத்தை நீடித்து வட்டியைக்...

2023-12-10 11:44:10
news-image

கொத்து கொத்தாக இலங்கையர்களின் உடலங்கள் இஸ்ரேலில்...

2023-12-10 11:16:12
news-image

நாடு முழுவதும் மின் துண்டிப்பு :...

2023-12-10 11:03:57
news-image

இலங்கைக்கு தேசிய விடுதலை இயக்கமே அவசியம்...

2023-12-10 11:08:10
news-image

செவ்வாயன்று இலங்கைக்கு மங்களகரமான செய்தி கிடைக்கும்...

2023-12-10 11:22:31
news-image

கொஸ்லந்தை - கெலிபனாவெல பகுதியில் மண்சரிவு...

2023-12-10 10:59:03
news-image

மஹாநாயக்க தேரரின் குற்றச்சாட்டு தொடர்பில் அரசாங்கம்...

2023-12-09 21:05:21
news-image

தமிழரசின் தலைமைக்கு மும்முனையில் போட்டி

2023-12-09 20:44:27
news-image

முக்கிய சந்திப்புக்களை நடத்தும் உலகத் தமிழர்...

2023-12-09 20:54:30
news-image

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில்...

2023-12-10 09:52:53
news-image

கொழும்பில் இராஜதந்திர பணிகளை பொறுப்பேற்கும் சந்தோஷ்...

2023-12-10 11:32:10