கானாவின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு சுரங்க நகருக்கு அருகில் ஏற்பட்ட பாரிய வெடிப்பில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கானாவில் பொகோசோ நகருக்கு அருகில் சுரங்க வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 60 பேர் வரை காயமடைந்துள்ளனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என அந்நாட்டு தகவல் தொடர்பு அமைச்சர் கோஜோ ஓப்போங் நக்ருமா தெரிவித்தார்.
500க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் நாயகம் செஜி சாஜி அமெடோனு தெரிவித்துள்ளார்.
கானாவின் ஜனாதிபதி நானா அகுஃபோ-அடோ டுவிட்டர் பக்கத்தில் ,
நிலைமையைக் கட்டுப்படுத்த இராணுவம் அவசரகால முயற்சிகளில் இணைந்துள்ளதாகவும், நாட்டின் அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் குடியிருப்பாளர்களுக்கு விரைவான நிவாரணம் பணியை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இது உண்மையிலேயே சோகமான, துரதிர்ஷ்டவசமான சம்பவம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இரண்டாவது வெடிப்பைத் தவிர்க்க மற்றும் சம்பவ இடத்தைப் பாதுகாக்க பொலிஸார் மற்றும் இராணுவ நிபுணர்களின் குழு நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM