பிரபாகரனின் சடலமா..! போலிக் கதை : வீரகேசரி இணையத்தளத்திற்கு விசேட செவ்வி (பகுதி 1) - காணொளி இணைப்பு

Published By: Raam

05 Oct, 2016 | 11:06 PM
image

Leo Nirosha Darshan, MD.Lucias

கேள்வி : முப்­ப­டை­களின் தள­பதி என்ற வகையில் விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனின் சட­லத்தை கண்­டீர்­களா?

பதில் : நான் கனவில் கூட காண­வில்லை. அது போலி­யான கதை. அவ்­வா­றா­ன­தொரு மன­நி­லையில் நான் இல்லை. சட­லங்­களை கண்டு மகிழ்பவன் நான் இல்லை. பிர­பா­க­ரனும் விடு­தலைப்புலி­களும் என்று எனக்கு வேறு­பாடு இல்லை. நாம் நபர்­க­ளுடன் போரிட வில்லை. பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரா­கவே போரிட்டோம். எனவே அது போலி­யான கதை­யாகும். 

கேள்வி : இறுதிப்போரின் பின்னர் 12 ஆயிரம் போரா­ளி­க­ளுக்கு புனர்­வாழ்வு அளித்து உங்­க­ளது அர­சாங்­கத்­தினால் சமூ­க­ம­ய­மாக்­கப்­பட்­டது. ஆனால் அர­சியல் கைதி­களை விடு­விக்க தற்­போது நீங்கள் எதிர்ப்பை தெரி­விக்­கி­ன்­றீர்கள். 

பதில் : ஆம் மிக விரை­வாக அவர்­களை விடு­வித்தோம். ஆனால் அர­சியல் கைதி­களை விடு­விப்­ப­தற்கு நாங்கள் எதிர்ப்பு தெரி­விக்கவில்லை. எமது ஆட்சிக் காலத்தில் அர­சியல் கைதி­களை புனர்­வாழ்வு அளிக்க நாம் தயா­ரா­கு­கையில் தற்­போது குரல் எழுப்பும் சில சட்­டத்­த­ர­ணிகள் அன்று இவர்­களை நீதி மன்றில் ஆஜர்­ப­டுத்­து­மாறு குரல் கொடுத்­தனர். அந்த வழக்­கு­க­ளுக்கு அமை­வாக நாங்கள் நீதிமன்றில் ஆஜர்­ப­டுத்­தினோம். இல்லை என்றால் அவர்­களை புனர்­வாழ்வு முகா­மிற்கு அனுப்­பி­யி­ருப்போம். 

நீதிமன்றில் ஆஜர்­ப­டுத்­து­மாறு சட்­டத்­த­ர­ணிகள் அன்று கோரிக்கை விடுத்­தனர். அர­சியல் களத்தில் இருந்து தான் அந்த கோரிக்கை வந்­தது. எனவே நீதிமன்றில் குற்­றச்­சாட்டு காணப்­ப­டு­கின்­ற­மை­யினால் எமக்கு பேச முடி­யாது. இல்லை என்றால் அவர்­க­ளுக்கு அன்றே செல்ல முடிந்­தி­ருக்கும். அதனை விட குற்­றச்­சாட்­டுகள் உள்­ள­வர்கள் புனர்­வாழ்வு பெற்று வெளியில் சென்­றுள்­ளனர். அவர்கள் புனர்­வாழ்வு பெற்­ற­னரா? இல்­லையா? என்று எனக்கு தெரி­யாது. ஆனால் அவர்கள் சென்­றனர். அது எமக்கு பிரச்­சினை இல்லை. 

கேள்வி : அவர்கள் தேசிய பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்­த­லா­ன­வர்­களா?

பதில் : தற்­போது குற்­ற­வியல் குற்­றச்­சாட்­டு­களே அவர்­க­ளுக்கு காணப்­ப­டு­கின்­றன. அர­சியல் குற்­றச்­சாட்­டுகள் இல்லை. எனவே குற்­ற­வியல் குற்­றச்­சாட்­டு­க­ள் அர­சியல் குற்­றச்­சாட்­டு­கள் என்பதற்கு வித்தியாசம் உள்ளது. ஒரு­வ­ருக்கு எதி­ராக குற்­ற­வியல் குற்­றச்­சாட்­டுக்கள் காணப்­ப­டு­மாயின் அவர்­க­ளுக்கு அத­ன­டிப்­ப­டை­யி­லேயே நட­வ­டிக்கை எடுக்க முடியும். 

நீதிமன்றில் அந்த விடயம் காணப்­ப­டு­கின்­றது. நீதிமன்ற விட­யங்­களில் அர­சாங்கம் தலை­யிட்டால் அது தவ­றாகும். எனவே அர­சியல் விட­ய­மாகவும் தலை­யீடு செய்ய கூடாது என்­பதே எமது நிலை­ப்­பா­டாகும். நீதிமன்றில் அந்த விடயம் காணப்­ப­டு­கின்­றது. ஆகவே அது தற்­போது எமது விட­ய­மல்ல. நாம் கூறு­வதை தற்­போ­தைய அர­சாங்கம் கேட்­கின்­றதா? நாங்கள் கூறு­வ­தையே செய்­கின்­றதா? இல்லை. 

நாமல் சிறைக்கு சென்று அவர்­க­ளுடன் இருந்து விட்டு வந்து ஏன் அவர்­களை விடு­விக்க முடியவில்லை என என்­னிடம் கேட்டார். நீதிமன்றில் உள்ள வழக்கு என்றே நான் அவ­ருக்கு கூறினேன். சட்­ட­மா அ­திபர் திணைக்­க­ளத்­திற்கு முடியும் வழக்கை விலக்­கிக் ­கொள்­வ­தற்கு. இல்லை என்றால் துரி­தப்­ப­டுத்­தவும் முடியும். சாட்­சிகள் காணப்­ப­டு­மாயின் அவற்றை விசா­ரிக்க முடியும். இவர்­களை விடு­விக்கக் கோரும் அதே சமயம் மறுபுறம் சிலரை உள்ளே எடுக்­கின்­றனர். 

கேள்வி : வடக்கு மக்­களின் உள்­ளங்­களை வெற்றி கொள்ளவும் வடக்கு தெற்கு இணைப்பை கட்­டி­யெ­ழுப்ப உங்­களால்  முடி­யாமல் போன­தாக குற்றம் சாட்­டு­கின்­றனர். அதனை ஏற்றுக் கொள்­கின்­றீர்­களா?

பதில் : உண்­மை­யா­கவே போரை வெற்றி கொண்­டதன் பின்னர் அதில் அர­சியல் செய்­தி­ருக்க முடியும். அர­சியல் செய்­தி­ருந்தால். உள்­ளத்தை வெற்றி கொள்­வது குறித்து பேசி, அவர்­களை முகாம்­களில் வைத்துக் கொண்டு இருந்­தி­ருக்க முடியும். ஆனால் நாங்கள் என்ன செய்தோம்? எனக்கு பாரிய பொறுப்பு காணப்­பட்­டது. 

வடக்கின் பொரு­ளா­தாரம் வீழ்ச்சி. ஏனைய பகு­தி­களின் பொரு­ளா­தா­ரத்­துடன் நாட்டின் பொரு­ளா­தா­ரத்­தையும் கட்­டி­யெ­ழுப்ப வேண்டும். இலங்­கையின் அனைத்துப் பகு­தி­க­ளுக்கும் பொரு­ளா­தார வளர்ச்­சியின் நன்­மைகள் கிடைக்­கப்­பெற வேண்டும். மிதி வெடி­களால்  விவ­சாய நிலங்கள் அனைத்தும் பாழ­டைந்து காணப்­பட்­டன. எனவே முதலில் மிதி வெடி­களை அகற்­றினோம். அடுத்­த­தாக முகாம்­களில் இருந்­த­வர்­களை குடி­ய­மர்த்­தினோம். 

இதன் போது அவர்­க­ளுக்கு தேவை­யான அடிப்­படை வசதி­களை ஏற்­ப­டுத்­தினோம். மின்­சாரம், வீடு, நீர், வீதி போன்ற வச­தி­களை முதலில் வழங்க வேண்டும். பிள்­ளை­க­ளுக்கு பாட­சா­லைகள் இருக்க வேண்டும். நோயா­ளி­க­ளுக்கு வைத்­தி­ய­சா­லைகள் காணப்­பட வேண்டும். யாழ் குடாவை சென்று பாருங்கள். வைத்­தி­ய­சா­லைகள், அரச நிறு­வ­னங்கள், பாட­சா­லைகள், முழு வடக்­கிற்கும் 29 மஹிந்­தோ­தய ஆய்வுகூடங்கள், அனைத்­தையும் வழங்­கினோம். ஏனைய பகு­தி­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் அதி­க­மாக வடக்­கிற்கு வழங்­கினோம். காரை­ந­க­ருக்கு சென்று மஹிந்தோதய ஆய்வுநிலையை நான் திறந்து வைத்தேன். இந்த தேவை­களை வழங்­கினோம். 

நான் யாழுக்கு சென்று புகை­யி­ரத சேவையை திறந்து வைத்தேன். யாழ்­தேவி யாழுக்கு சென்றது. அந்த வச­தி­களை வழங்­கினோம். கடு­கதி பாதையை ஆரம்­பித்தோம். அதனை தற்­போ­தைய அர­சாங்கம் நிறுத்தி விட்­டது. ஆனால் வீதிகள் அனைத்தும் சிறப்­பாக அமைக்­கப்­பட்­டுள்­ளது. 

அதற்கு பின்னர் எந்த வீதி­யா­வது கார்பட் போடப்­பட்­டதா? என்று கூறுங்கள் பார்ப்போம். ஒரு வீதி­யை­யா­வது அமைத்­தார்­களா? இவற்றை நான் செய்தேன். மக்­களின் பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­பாமல் எதனை செய்­தாலும் பல­னில்லை. வயிற்­றுப்­ப­சியில் இருப்­ப­வர்­க­ளுக்கு போதனை செய்­வதில் என்ன பலன். எனவே அவர்­களின் வயிற்­றுப்­ப­சியை முதலில் தேற்ற வேண்டும். அடிப்­படை பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­பட வேண்டும். மின்­சாரம் இல்­லாமல் இருளில் பிள்­ளை­க­ளுக்கு ஒன்றும் கூறி வேலை­யில்லை. எனவே தான் நாங்கள் அடிப்­படை விட­யங்­களை முன்­னெ­டுத்தோம். ஆனால் அர­சியல் ரீதி­யான ஒரு கலந்­து­ரை­யா­ட­லுக்கு நாங்கள் செல்ல வில்லை. நான் அர­சியல் தலைவர். ஏனை­ய­வர்­க­ளுக்கு அங்கு சென்று செய­ற்­பட்­டி­ருக்க முடியும். அது எமது பக்க தவறு. 

ஆனால் தற்­போ­தைய அர­சாங்கம் என்ன செய்­துள்­ளது. அனைத்­தையும் அர­சி­யல்­ம­ய­மாக்­கு­கின்­றது. இரா­ணு­வத்தை அகற்­று­கின்­றது. எந்­த­ளவு குறைக்­கப்­பட்­டுள்­ளது என்­பது எனக்கு தெரி­யாது. ஆனால்  இடம்­பெயர் முகாம் ஒன்­றை­யா­வது மூடி­யுள்­ளதா என்று கூறுங்கள் பார்க்­கலாம். ஏதா­வது ஒன்றை கூறுங்கள். இந்த இடத்தில் இருந்த முகாமை மூடி விட்டு மக்­களை குடி­ய­மர்த்­தினோம் என்று கூறட்டும் பார்க்­கலாம். என்னை விட உங்­க­ளுக்கு யாழ்ப்­பாணம் தொடர்­பாக தெரியும் தானே. நீங்கள் கூறுங்கள். நான் தோல்­விக்கு பின்னர் செல்­லவே இல்லை. ஆனால் அங்கு என்ன நடக்­கின்­றது என்­பது எனக்கு தெரியும். ஒன்றை கூட மூடவில்லை. அர­சாங்கம் தமிழ் மக்கள் தொடர்பில் சிந்­திக்கவில்லை என்­பதே இதி­லி­ருந்து வெளிப்­ப­டு­கின்­றது.  

பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்­மையை ஏற்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு சுமந்­திரன் சம்­பந்தன் ஆகி­யோரை  சந்­தோ­ஷப்­ப­டுத்­து­கின்­றது. தமிழ் மக்­க­ளுக்கு என்ன நடந்­துள்­ளது? ஒன்றும் இல்லை. மக்­க­ளுக்­காக ஒன்றும் செய்யவில்லை என்­பதை நான் அச்­ச­மின்றி கூறுவேன். நான் நிர்­மா­ணித்­த­வையை திறந்து வைக்­கின்­றனர். வைத்­தி­ய­சாலை மற்றும் பொறி­யியற்பீடம் அனைத்­தையும் நான் நிர்­மா­ணித்தேன். மின்­சாரம். நான் நிர்­மாணித்­த­வையை அவர்கள் திறந்து வைக்­கின்­றனர். 

கேள்வி : வட­மா­காண முத­ல­மைச்­சரின் கருத்து மற்றும் வடமாகாண சபையின் செயற்­பா­டுகள் குறித்து கடும் விமர்­ச­னங்கள் காணப்­ப­டு­கின்­றன. வட மாகாண சபைத் தேர்­தலை நடத்­தி­யவர் என்ற வகையில் கவ­லை­ய­டை­கின்­றீர்­களா?

பதில் : ஒரு போதும் இல்லை. பைத்­தி­யமா? நான் மிகவும் மகிழ்ச்­சி­ய­டை­கின்றேன். அந்த மக்­களின் உரிமை அது. தேர்­தலை நடத்த வேண்டாம் என பலர் என்­னிடம் கூறி­னார்கள். தோல்­வியை அறி­யாமல் நான் தேர்­தலை நடத்தவில்லை. ஆனால் தேர்­தலை நடத்­தினேன். மக்­க­ளுக்கு ஆட்சி நிரு­வாகம் தொடர்பில் அறிவு ஏற்­பட வேண்டும் என்­ப­தற்­காக தேர்­தலை நடத்­தினேன். முத­ல­மைச்­சரை இன­வாதி என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அவர் அர­சியல் செய்­கின்றார். இது தெளிவா­கவே காணப்­ப­டு­கின்­றது. அர­சாங்­கத்­திற்கு புரி­ய­வைக்க அவ­ருக்கு முடி­ய­வில்லை. ஒன்றும் இல்லை. தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­பட்­டுள்­ளதா? பிள்­ளை­க­ளுக்கு தொழில் வழங்­கப்­பட்­டுள்­ளதா? வீதி ஒன்­றா­வது அமைத்­துள்­ள­தா? இடம்­பெயர் முகாமை மூடி­னார்­களா? மீள் குடி­ய­மர்த்­தி­னார்­களா? 

மீன­வர்­க­ளுக்கு மீன்­களை பிடிக்க அனு­ம­திக்கவில்லை. பிடித்து கொண்டு செல்­கின்­றனர். நிவா­ரணம் உள்­ளதா? இல்லை. கடற்படை இன்னும் 3 கடல் மைல் தூரம் பின்­னோக்கி வந்­துள்­ளது. அந்த பகு­தி­யிலும் மீன்­களை பிடித்துக் கொண்டு செல்­கின்­றனர். மீன­வர்­க­ளுக்கு என்ன செய்­கின்­றீர்கள். 30 ஆண்டு கால­மாக கடற்­றொழில் ஈடு­பட முடி­யாமல் இருந்­த­வர்­க­ளுக்கு அந்த வாய்ப்பை நாங்­கள் வழங்­கினோம். அதனை தற்­போது இல்­லா­ம­லாக்­கி­யுள்­ளனர். 

இவற்­றுக்கு முத­ல­மைச்­சரால் தீர்வை தேட முடியவில்லை. அர­சாங்­கத்­திற்கும் முடி­ய­வில்லை. எனவே இன­வா­தத்தை பேசி பிரச்­சி­னையை திசை திருப்­பு­கின்­றனர். மக்­க­ளுக்கு பிரச்­சி­னைகள் மறந்து விடு­கின்­றது. பொருட்­களின் விலை அதிகம். விவ­சா­யி­க­ளுக்கு உற்­பத்­தி­களை விற்­பனை செய்துக் கொள்ள முடி­ய­வில்லை. பெரிய வெங்­காயம் உற்­பத்தி பாதிப்பு, இவை தான் யாழ்ப்­பா­ணத்தில் காணப்­படும் உண்மை நிலை. சாதா­ரண மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்த்து கொள்ள முடி­யாமல் திசை ­தி­ருப்­பு­கின்­றனர். அதனை தான் முத­ல­மைச்சர் அர­சாங்­கத்­துடன் இணைந்து செய்தார். 

ஆனால் அந்த உரிமை அவர்­க­ளுக்கு உள்­ளது. அது எமக்கு பிரச்­சினை இல்லை. ஆனால் அவ்­வா­றான கருத்­துக்கள் மிகவும் ஆபத்­தா­னது. இதனால் இனங்கள் பிள­வுபடும். ஆனால் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் முதலமைச்சரை இன­வா­தி­யாக கூற முடி­யாது. 

கேள்வி : உங்­க­ளது ஆட்­சிக்­ கா­லத்தில் இல்­லாத சுதந்­திரம் தற்­போது காணப்­ப­டு­வ­தா­லேயே விக்­னேஸ்­வரன் போன்ற தலை­வர்கள்  ஆர்ப்­பாட்­டத்தில் ஈடுப­டு­வ­தாக நிலைப்­பாடு உள்­ளது. இவ்­வா­றான ஆர்ப்­பாட்­டங்­க­ளுக்கு நீங்கள் சந்­தர்ப்பம் அளிப்­பீர்­களா? அந்த கோரிக்­கைகள் தொடர்பில் உங்கள் நிலைப்­பாடு என்ன? 

பதில் : நாட்டில் சட்டம் ஒன்­றாக இருக்க வேண்டும்.  இன­வா­தத்தை தூண்­டு­வது சரி என்றால் நாட்டின் சட்டம் அது என்றால் சரி. ஏனை­ய­வர்­க­ளுக்கும் சுதந்­திரம் உள்­ளது. அவர்­க­ளது இன­வா­தத்தை தூண்­டு­வ­தற்கு. அப்­படி இல்லை என்றால் அது முழு­மை­யாக தவ­றாகும். எனது காலத்தில் அது இன­வா­த­மாக வந்­தி­ருந்தால் முடி­யாது என்று கூறி­யி­ருப்பேன். உண்மை. தவ­றாக நினைக்க வேண்டாம். இன­வா­தத்­திற்­காக மக்கள் அங்கு வரவில்லை. நான் முன்பு கூறி­யவை அங்கு இல்லை. நெல்லை விற்­பனை செய்ய முடியவில்லை. அர­சாங்­கத்­திற்கு எதி­ராக  விவசாயி வந்தார். கடற்­றொ­ழிலில் ஈடு­பட முடி­ய­வில்லை மீன­வர்கள் வந்­தனர். இளை­ஞர்­க­ளுக்கு தொழில் இல்லை அவர்­களும் வந்­தனர். பட்­ட­தா­ரி­க­ளுக்கு இன்று தொழில் இல்லை. அரச ஊழி­யர்­க­ளுக்கு வாழ்­வா­தார பிரச்­சினை அவர்­களும் வந்­தனர். எனவே இன­வா­த­மாக வர­வில்லை. தெற்­கிலும் அதே நிலை தான். தெற்கின் பிரச்­சி­னைகள் வடக்­கிலும் தாக்கம் செலுத்தும். வடக்கு மக்­க­ளுக்கு சிறப்­பு­ரி­மைகள் வழங்­கப்­படவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04