சீனா திறக்கும் அடுத்த கதவு

Published By: Digital Desk 2

19 Jan, 2022 | 02:45 PM
image

சுபத்ர

“சீன வெளிவிவகார அமைச்சரின்பயணத்தின் போது. இருதரப்பு உறவுகளில் மூன்றாவது தரப்பின் தலையீடுகளுக்கு இடமில்லைஎன்று சீனா கூறியிருக்கிறது. ஆனால் மூன்றாவது தரப்பு என்ற விடயத்தை சீனாவெளிப்படுத்தியிருப்பினும் அது யார் என்று கூறவில்லை”

இறப்பர் – அரிசி உடன்பாடு ஏற்பட்டு,70ஆண்டுகளையும், இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 65ஆண்டுகளையும், கடந்துள்ளஇலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள், இப்போது புதிய எல்லை ஒன்றை நோக்கிநகரும் சமிக்ஞைகள் தென்படுகின்றன.

இலங்கைக்கும் சீனாவுக்கும்இடையிலான, இராஜதந்திர உறவுகள், வர்த்தக உறவுகளுக்கு அப்பால், இருதரப்பு பாதுகாப்புஒத்துழைப்பு உடன்பாடு ஒன்றுக்கு அழைப்பை விடுத்திருக்கிறது சீனா.

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யிஇலங்கைக்கான பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய கையுடன், கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் குறிப்பிட்ட சில ஊடகவியலாளர்களை மட்டும் அழைத்து,சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார்.

அந்தச் சந்திப்பின் போது, அவர்,இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் உறுதித்தன்மை மற்றும் செழிப்புக்கு உதவும்வகையில், இலங்கையும், சீனாவும் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்றுவலியுறுத்தியிருக்கிறார்.

“பாதுகாப்பு முன்னேற்றம் மற்றும்பரிமாற்றங்கள் இருதரப்பு உறவுகளில் மிகவும் முக்கியமான பகுதியாகும்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-01-16#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://mypaper.lk/

முக்கிய செய்திகள்

icon-left
icon-right