தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை இன்று ஒத்திவைப்பு

Published By: MD.Lucias

05 Oct, 2016 | 12:33 PM
image

தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள பிரச்­சி­னைக்கு உட­னடி தீர்வு காணும் முக­மாக தொழில் அமைச்சில் இன்று காலை நடைபெறவிருந்த கூட்டு ஒப்­பந்த பேச்­சு­வார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை இடம்பெறும்.

இதேவேளை  தொழில் அமைச்சில் நேற்று முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­திற்கும் தொழிற்­சங்க பிர­தி­நி­தி­க­ளுக்கும் இடையில் 11 ஆவது தட­வை­யாகநடை­பெற்ற பேச்­சு­வார்த்­தை எவ்­வித இணக்­கப்­பா­டு­களும் எட்­டப்­ப­டாத நிலையில் தோல்­வியில் முடி­வ­டைந்­தமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் ஜோன் சென­வி­ரத்ன தலை­மையில் நாரா­ஹேன்­பிட்­டியில் அமைந்­துள்ள தொழில் மற்றும் தொழிற்­சங்க உறவு துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில், 

நாளொன்­றுக்கு 620 ரூபா­வாக வழங்­கப்­படும் சம்­ப­ளத்தை 745 ஆக அதி­க­ரிக்க வேண்டும். இவ்­வாறு சம்­பளம் அதி­க­ரித்த பின்னர் தொழி­லா­ளர்­க­ளுக்கு 6 நாட்கள் வேலை வழங்­கப்­பட வேண்டும் என தொழிற்­சங்­கங்கள் வாதிட்­டன.

எனினும் தொழி­லா­ளர்­களின் சம்­ப­ளத்தை 730 ரூபா­வாக அதி­க­ரிக்க முடியும். ஆனாலும் தொழி­லா­ளர்கள் 4 நாட்கள் மாத்­தி­ரமே வேலை செய்ய வேண்டும் என முத­லா­ளிமார் சம்­மே­ளனம் வாதிட்­டது. இதன்­படி தொழிற்­சங்­கங்­களின் கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­ட­தனை அடுத்து இணப்­பா­டுகள் எதுவும் எட்­டப்­ப­டாத நிலையில் பேச்­சு­வார்த்தை முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­டமை குறிப்பிடத்தக்கது.

 இதில் பெருந்­தோட்ட கைத்­தொழில் துறை அமைச்சர் நவீன் திஸா­நா­யக்க, தொழில் மற்றும் தொழிற்­சங்க உறவு துறை இரா­ஜாங்க அமைச்சர் ரவீந்­திர சம­ர­வீர, இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான முத்து சிவ­லிங்கம் , அக்­கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஆறு­முகன் தொண்­டமான், ஊவா மாகாண சபை அமைச்சர் செந்தில் தொண்­டமான், மத்­திய மாகாண சபை அமைச்சர் என்.ரமேஸ்­வரன், இலங்கை தேசிய தோட்ட தொழி­லாளர் சங்­கத்தின் செய­லா­ளரும் ஊவா மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான வடிவேல் சுரேஷ் மற்றும் பெருந்­தோட்ட தொழி­லாளர் கூட்­ட­மைப்பின் தலைவர் எஸ். ராம­நாதன் உட்­பட தெழிற்­சங்க பிர­தி­நி­திகள் பலர் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

தோட்ட தொழி­லா­ளர்கள் தமது சம்­ப­ளத்தை அதி­க­ரிக்க கோரி தொடர்ந்து 10 ஆவது நாளாக இன்றைய தினமும் பேராட்­டங்­களில் ஈடுட்­டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09