தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணும் முகமாக தொழில் அமைச்சில் இன்று காலை நடைபெறவிருந்த கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை இடம்பெறும்.
இதேவேளை தொழில் அமைச்சில் நேற்று முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் 11 ஆவது தடவையாகநடைபெற்ற பேச்சுவார்த்தை எவ்வித இணக்கப்பாடுகளும் எட்டப்படாத நிலையில் தோல்வியில் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் ஜோன் செனவிரத்ன தலைமையில் நாராஹேன்பிட்டியில் அமைந்துள்ள தொழில் மற்றும் தொழிற்சங்க உறவு துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில்,
நாளொன்றுக்கு 620 ரூபாவாக வழங்கப்படும் சம்பளத்தை 745 ஆக அதிகரிக்க வேண்டும். இவ்வாறு சம்பளம் அதிகரித்த பின்னர் தொழிலாளர்களுக்கு 6 நாட்கள் வேலை வழங்கப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் வாதிட்டன.
எனினும் தொழிலாளர்களின் சம்பளத்தை 730 ரூபாவாக அதிகரிக்க முடியும். ஆனாலும் தொழிலாளர்கள் 4 நாட்கள் மாத்திரமே வேலை செய்ய வேண்டும் என முதலாளிமார் சம்மேளனம் வாதிட்டது. இதன்படி தொழிற்சங்கங்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதனை அடுத்து இணப்பாடுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் பேச்சுவார்த்தை முடிவுக்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதில் பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவு துறை இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் , அக்கட்சியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், ஊவா மாகாண சபை அமைச்சர் செந்தில் தொண்டமான், மத்திய மாகாண சபை அமைச்சர் என்.ரமேஸ்வரன், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் செயலாளரும் ஊவா மாகாண சபை உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் மற்றும் பெருந்தோட்ட தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் எஸ். ராமநாதன் உட்பட தெழிற்சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
தோட்ட தொழிலாளர்கள் தமது சம்பளத்தை அதிகரிக்க கோரி தொடர்ந்து 10 ஆவது நாளாக இன்றைய தினமும் பேராட்டங்களில் ஈடுட்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM