ஐ.சி.சி.பொதுநலவாய தகுதிகாண் சுற்றுப் போட்டி கோலாலம்பூரில் செவ்வாய் ஆரம்பம்

17 Jan, 2022 | 09:40 AM
image

(என்.வீ.ஏ.)

பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவில் மகளிர் இருபது - 20 கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள  8 ஆவது அணியைத் தீர்மானிக்கும் ஐ.சி.சி. பொதுநலவாய தகுதிகாண் சுற்று கோலாலம்பூரில் செவ்வாய்க்கிழமை (18) ஆரம்பமாகவுள்ளது.

இந்த தகுதிகாண் சுற்றில் இலங்கை, பங்களாதேஷ், கென்யா, மலேசியா, ஸ்கொட்லாந்து ஆகிய ஐந்து நாடுகளின் மகளிர் அணிகள் பங்குபற்றுகின்றன.

ஐ.சி.சி. தரவரிசைப்படி முதல் 7 இடங்களுக்குள் இருந்த அவுஸ்திரேலியா, பார்படோஸ், இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகள் ஏற்கனவே நேரடி தகுதிபெற்ற நிலையில் அவற்றுடன் 8ஆவது நாடாக இணையப்போகும் அணியை கோலாலம்பூர் தகுதிகாண் சுற்று தீர்மானிக்கும்.

இந்த தகுதிகாண் சுற்றில் பங்குபற்றும் 5 நாடுகளும் ஒன்றையொன்று லீக் சுற்றில் எதிர்த்தாடும். 

லீக் சுற்று முடிவில் முதலிடம் பெறும் நாடு பொதுநலவாய விளையாட்டு விழாவில் 8 ஆவது நாடாக பங்குபற்ற தகுதி பெறும்.

'மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை விட இந்த வருடம் நடைபெறவுள்ள பிரதான கிரிக்கெட் போட்டி பொதுநலவாய விளையாட்டு விழா கிரிக்கெட் போட்டியாகும். 

உலகக் கிண்ண போட்டியில் பங்குபற்ற முடியாமல் போனதை பொதுநல விளையாட்டு விழாவில் பங்குபற்ற கிடைப்பதன் மூலம் நிவர்த்தி செய்வதாக கருத முடியாது. ஆனால், அதனால் எமக்கு சிறு ஆறுதல் கிடைக்கும்' என இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து தெரிவித்தார்.

'இந்த சுற்றுப் போட்டியில் (தகுதிகாண்) வெற்றிபெற்று பேர்மிங்ஹாம் பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கு தகுதிபெற எங்களுக்க நல்ல வாய்ப்பு இருக்கின்றது. 

எமது அணியில் அனுபவசாலிகள் இடம்பெறும் அதேவேளை திறமைவாய்ந்த இளம் வீராங்கனைகளும் இருக்கின்றனர்' என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த தகுதிகாண் சுற்றில் இலங்கை தனது முதலாவது போட்டியில் ஸ்கொட்லாந்தை செவ்வாய்க்கிழமை (18) எதிர்த்தாடும்.

கென்யாவை 20 ஆம் திகதியும் மலேசியாவை 22 ஆம் திகதியும் பங்களாதேஷை 24 ஆம் திகதியும் இலங்கை சந்திக்கவுள்ளது.

இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாம்

சமரி அத்தபத்து (தலைவி), ஹர்ஷிதா மாதவி (உதவித் தலைவர்), ஹசினி பெரேரா, நிலக்ஷிகா சில்வா, அனுஷா சஞ்சீவனி, கவிஷா டில்ஹாரி, அமா காஞ்சனா, சச்சினி நிசன்சலா, உதேஷிக்கா ப்ரபோதனி, இனோக்கா ரணவீர, விஷ்மி ராஜபக்ஷ, ஓஷாதி ரணசிங்க, சுகந்திக்கா குமாரி, தாரிக்கா செவ்வந்தி, ப்ரசாதினி வீரக்கொடி, அச்சினி குலசூரிய.

பதில் வீராங்கனைகள் : மதுஷிக்கா மெத்தானந்த, காவியா காவிந்தி, இமேஷா துலானி. சத்யா சந்தீப்பனி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பத்து வீரர்களுடன் விளையாடி ஜாவா லேனின்...

2026-03-15 01:31:22
news-image

பொன் அணிகளின் போர் வெற்றிதோல்வியின்றி முடிவு

2026-03-15 01:32:27
news-image

வெற்றிதோல்வியின்றி முடிவடைந்த நீல வர்ணங்களின் சமரில்...

2026-03-15 01:19:21
news-image

யாழ். இந்துவை வீழ்த்தி கடந்த வருட...

2026-03-15 01:15:04
news-image

149ஆவது நீலவர்ணங்களின் சமர்: சென் தோமஸ்...

2026-03-14 04:44:29
news-image

ஆதம் ஹில்மி குவித்த சதத்தின் உதவியுடன்...

2026-03-14 04:39:33
news-image

சென். பட்றிக்ஸ் அணிக்கு கடைநிலை வீரர்...

2026-03-13 21:00:51
news-image

இந்துக்களின் சமரில் அடுத்தடுத்த அத்தியாயங்களில்  சுபர்ணன்...

2026-03-13 21:06:05
news-image

கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமானது 15ஆவது இந்துக்களின்...

2026-03-13 15:07:11
news-image

15ஆவது இந்துக்களின் சமர்: யாழ். இந்துவின்...

2026-03-13 01:26:48
news-image

புனித அந்தோனியார் 157, திரித்துவம் 66...

2026-03-12 21:22:49
news-image

ஹார்மிஷன் துடுப்பாட்டத்திலும் ஆதித்தியா பந்துவீச்சிலும் அபாரம்;...

2026-03-12 20:22:39