பாராளுமன்றம் நாளை ஜனாதிபதியினால் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்படும்

Published By: Digital Desk 3

17 Jan, 2022 | 09:19 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை காலை 10.00 மணிக்கு வைபவரீதியாக ஆரம்பித்துவைக்க உள்ளார். 

பாராளுமன்றம் கடந்த டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தை அனுமதித்துக்கொண்ட பின்னர் ஜனவரி மாதம் 11 ஆம் திகதிவரை சபாநாயகரினால் ஒத்திவைக்கப்பட்டது. என்றாலும் அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்துக்கமைய கடந்த டிசம்பர் மாதம் 13ஆம் திகதி ஜனாதிபதி காேட்டாய ராஜபக்ஷ விசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் பாராளுமன்ற கூட்டத்தொடரை ஜனவரி 18ஆம் திகதிவரை ஒத்திவைத்திருந்தார்.

பாராளுமன்ற கூட்டத்தொடர் ஜனாதிபதியினால் ஒத்திவைக்கப்பட்டால் அது மீண்டும் ஜனாதிபதியினால் ஆரம்பித்துவைக்கப்படவேண்டியது பாராளுமன்ற சம்பிரதாயமாகும். 

அரசியலமைப்பின் 33(2) யாப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு அரசின் கொள்கைப்பிரகடனத்தை பாராளுமன்றத்தில் முன்வைப்பார்.

அத்துடன் நாளைய தினம் பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்துவைப்பதற்காக  ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வருகைதரும் நிகழ்வு அவருடைய ஆலோசனைக்கு அமைய மிகவும் எளிமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி மரியாதை துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்படுத்தல் மற்றும் வாகன அணிவகுப்பு என்பன இடம்பெறாது.  என்றாலும் ஜனாதிபதியை வரவேற்கும் முகமாக பாராளுமன்ற வளாகத்தில் பொலிஸ் கலாசார பிரிவின் பங்களிப்புடன் கலாசார மரியாதை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

அதன் பிரகாரம்  நாளைய தினம் ஜனாதிபதி பாராளுமன்ற வளாகத்துக்கு வருவதற்கு முன்னர் காலை 09.15 மணிக்கு விருந்தினர்களின் வருகை இடம்பெறவுள்ளது. 

ஆரம்பமாக  பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகை தரவுள்ளார். அதன் பின்னர்  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் வருகையும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின்  வருகையும் அதனை அடுத்து  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ்வின் வருகையும் இடம்பெறும். 

சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க ஆகியோர் பாராளுமன்ற நுழைவாயிலில்  ஜனாதிபதியை வரவேற்பார்கள்.  

இதன்போது பாராளுமன்றத்தின் பிரதான வாயிலின் அருகில் ஸ்ரீ ஜயவர்தனபுர, ஜனாதிபதி மகளிர் கல்லூரி மாணவிகள் ஜயமங்கள கீதம் இசைத்து  ஜனாதிபதியை  ஆசிர்வதிக்கவுள்ளனர். அதனை அடுத்து படைக்கலசேவிதர், பிரதிப் படைக்கலசேவிதர் மற்றும் உதவிப் படைக்கலசேவிதர், சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் உள்ளிட்ட குழுவினரால் ஜனாதிபதி  சபை நடுவால் சபாநாயகர் ஆசனத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்.

அதனையடுத்து ஜனாதிபதியினால் அரசின் கொள்கைப் பிரகடனம் முன்வைக்கபடும். கொள்கை பிரகடனம் நிறைவடைந்த பின்னர், பாராளுமன்றம் மறுநாள் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்படும்.

இதேவேளை, ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை வைபவரீதியாக ஆரம்பிக்கும் நிகழ்வுக்கு  வெளிநாட்டு இராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள், பிரதம நீதியரசர், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47