இலங்கை கிரிக்கெட் வீரரர் பானுக ராஜபக்ஷ தனது ஓய்வு கடிதத்தை மீளப் பெறுவதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளார்.
இந்த தகவலை இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் செயலாளர் மொஹான் டி சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவினை பானுக ராபக்ஷ ஜனவரி 03 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திற்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, லசித் மலிங்கா உட்பட பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் பலர் ஓய்வு குறித்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.
இந் நிலையில் இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்ஷ விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை நேற்று அலரி மாளிகையில் வைத்து சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின் போது அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, ஓய்வு முடிவை மீள்பரிசீலனை செய்யுமாறு பானுக ராஜபக்ஷவிடம் பகிரங்க வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந் நிலையிலேயே பானுக ராஜபக்ஷ ஓய்வு குறித்த முடிவினை மீளப் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM