இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் பணிப்பகிஷ்கரிப்பு ; 200 புகையிரத சேவைகள் இரத்து

Published By: Vishnu

13 Jan, 2022 | 08:03 AM
image

இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தினர் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக 200 புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால் இன்று 80 ரயில் சேவைகள் மாத்திரமே முன்னெடுக்கப்படும் என்று இலங்கை ரயில்வே சேவையின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

புகையிரத பயண கால அட்டவணையை நடைமுறைப்படுத்தாமை, ரயில்வே ஊழியர்களை முறையாக நிர்வாகம் செய்ய தவறியமை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முன் அறிவிப்பின்றி புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்படுவதனால் பொது மக்களும் புகையிரத நிலைய அதிபர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாவதாக சங்கத்தினர் குறிப்பிடுகின்றனர்.

கொழும்பில் இருந்து பெலியத்த, வவுனியா, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைக்கு நீண்ட தூர பயணங்களை ஆரம்பிக்கவுள்ளதாக இந்த வார தொடக்கத்தில் நிர்வாகம் அறிவித்து பயணச்சீட்டுகளை வழங்கியதாகவும், ஆனால் நேற்றைய தினம் புகையிரத பயணங்களை இரத்து செய்ததாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான சம்பவங்களினால் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்தே இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தினர் நள்ளிரவு முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53