இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தினர் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக 200 புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் இன்று 80 ரயில் சேவைகள் மாத்திரமே முன்னெடுக்கப்படும் என்று இலங்கை ரயில்வே சேவையின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
புகையிரத பயண கால அட்டவணையை நடைமுறைப்படுத்தாமை, ரயில்வே ஊழியர்களை முறையாக நிர்வாகம் செய்ய தவறியமை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முன் அறிவிப்பின்றி புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்படுவதனால் பொது மக்களும் புகையிரத நிலைய அதிபர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாவதாக சங்கத்தினர் குறிப்பிடுகின்றனர்.
கொழும்பில் இருந்து பெலியத்த, வவுனியா, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைக்கு நீண்ட தூர பயணங்களை ஆரம்பிக்கவுள்ளதாக இந்த வார தொடக்கத்தில் நிர்வாகம் அறிவித்து பயணச்சீட்டுகளை வழங்கியதாகவும், ஆனால் நேற்றைய தினம் புகையிரத பயணங்களை இரத்து செய்ததாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான சம்பவங்களினால் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்தே இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தினர் நள்ளிரவு முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM