அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு பொய்ப்பிரசாரங்களில் ஈடுபடும் எதிரணி

Published By: Raam

04 Oct, 2016 | 10:05 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

அரச அதிகாரிகள் தங்கள் கிராமங்களுக்கு சென்று அரசியல் செய்யும் காலம் முடிந்துவிட்டது. அவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவேண்டும் என அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

இரத்தினபுரியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

பாராளுமன்றத்தில் கூட்டு எதிர்க்கட்சி என்று சொல்லிக்கொண்டிருக்கும் ஒருசிலர் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். ராஜபக்சவினர் எப்போதும் அதிகாரத்தில் இருக்கவேண்டும் என்றே நினைக்கின்றனர்.  அதிகாரம் என்பது யாரிடமும் இருக்கலாம் எப்போது வேண்டுமானாலும் இல்லாமல் போகலாம். 

இந்த அரசாங்கம் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே முன்னின்று செயற்படும். அரசாங்கம் அவ்வாறு நடந்துகொள்ளும்போது அரச ஊழியர்களும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவேண்டும், அரசாங்கத்தின் வருமானங்களின் பிரதிபலன் மக்களுக்கு போய்ச்சேர நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். நிறுவனங்களின் அதிகாரிகள் கிராமங்களுக்கு சென்று அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சிக்கின்றனர், இது தொடர்பாக ஒருவருட காலம் அவதானித்து வந்தோம். இனிமேல் அரச அதிகாரிகள் கிராமங்களுக்கு சென்று அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது. அவ்வாறு செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59