மீன்பிடிக்கச் சென்ற மீனவர் படகு விபத்தில் உயிரிழப்பு

Published By: Digital Desk 4

11 Jan, 2022 | 02:29 PM
image

யாழ். மாதகல் கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் சடலமாக கரை ஒதுங்கியுள்ளதுடன் அவர் சென்ற படகு சேதமடைந்து கடலில் கவிழ்ந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழழமை (11) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மாதகல் குசுமாந்துறையைச் சேர்ந்த திலீபன் என அழைக்கப்படும் எட்வெர்ட் மரியசீலன் (வயது-31) என்ற மீனவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த மீனவர் தொழிலுக்குச் சென்ற நிலையில் மாதகல் கடற்பரப்பிலிருந்து 200 மீற்றர் தூரத்தில் படகு கவிழ்ந்து காணப்பட்டுள்ளது.

அதனை அடுத்து உள்ளூர் மீனவர்களினால் படகு மீட்கப்பட்டதுடன் உயிரிழந்த மீனவரின் சடலமும் மீட்கப்பட்டது.

மீனவரின் படகு மீது கடற்படையினரின் படகு மோதியதாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் மீனவர்கள் குற்றச்சாட்டும் நிலையில் கடற்படையினர் அதனை மறுத்துள்ளதுடன் இந்திய மீனவர்களின் றோலர் படகு மோதி விபத்து இடம்பெற்றிருக்கலாம் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய ஆகிய பகுதிகளில் ஆரோக்கியமற்ற...

2025-02-18 09:46:11
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் பலி...

2025-02-18 09:49:06
news-image

முல்லைத்தீவு பகுதியில் தகராறில் குடும்பஸ்தர் ஒருவர்...

2025-02-18 09:09:26
news-image

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல்...

2025-02-18 09:08:51
news-image

இன்றைய வானிலை

2025-02-18 06:10:45
news-image

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்;...

2025-02-18 03:55:17
news-image

சுழிபுரத்தில் கோடாவுடன் ஒருவர் கைது!

2025-02-18 03:49:47
news-image

தமிழ் இளைஞர் தோட்ட உத்தியோகஸ்த்தரால் நாய்களை...

2025-02-18 03:47:27
news-image

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள்...

2025-02-18 03:39:40
news-image

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு...

2025-02-18 03:58:04
news-image

ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்;...

2025-02-18 03:21:04
news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35