தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நிகழ்வினை நடத்துவதற்கான அனுமதியினை தமிழக அரசு வழங்கியுள்ளதுடன், அதற்கான விரிவான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.
கொவிட்-19 பரவல் அதிகரித்துள்ள நிலையில், இவ்வாண்டு ஜல்லிக்கட்டு நிகழ்வு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் இந்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கான தமிழக அரசின் கொவிட்-19 சுகாதார வழிகாட்டல்கள்:
- 300 மாடுபிடி வீரர்களை கொண்டு போட்டி நடத்தலாம் எனவும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய வீரர்கள் மட்டும் போட்டியில் பங்கேற்க வேண்டும்.
- கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் அதிகபட்சமாக 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
- நிகழ்ச்சிக்கு 3 நாட்களுக்கு முன் மாவட்ட நிர்வாகத்திடம் மாடுபிடி வீரர்கள் அடையாள அட்டை பெற வேண்டும்.
- போட்டி நடைபெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு பரிசோதனை மேற்கொண்டு பார்வையாளர்கள் எதிர்மறை சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும்.
- ஜல்லிக்கட்டு போட்டியை காண வரும் பார்வையாளர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம்.
- ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சிகளில் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுகிறது.
- காளையை பதிவு செய்யும் போது உரிமையாளருக்கும் பதிவு கட்டாயம், அடையாள அட்டை இல்லை என்றால் அனுமதி இல்லை
- மாடுபிடி வீரர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி சான்று கோவிட் எதிர்மறை சான்று கட்டாயம்.
- கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஒரு காளையுடன் உரிமையாளர், ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
- அனுமதிக்கப்பட்ட இருக்கையில் 50% என்ற எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM