சிவலிங்கம் சிவகுமாரன்
“எனது இராஜாங்க அமைச்சுப்பதவி பறிக்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களின்வாயிலாகவே அறிந்து கொண்டேன்.எனினும் மீண்டும் சட்டத்தரணிக்குரிய கறுப்பு அங்கியைஅணிவதற்கு வாய்ப்பு கிடைத்தமைக்கு மகிழ்ச்சி” என ஜனாதிபதியால் பதவிபறிக்கப்பட்ட ‘கனவான்’ அரசியல்வாதியும் கல்விமறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகம், தொலைக்கல்வி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சரும் சட்டத்தரணியுமான சுசில் பிரேம்ஜயந்த கருத்துத்தெரிவித்திருந்தார்.
இந்த கூற்றில் இரண்டு விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. முதலாவதாக, ஜனாதிபதியின் நிறைவேற்றதிகாரம் எதற்கெல்லாம்பயன்படுத்தப்படுகின்றது என்பது குறித்து, அவருக்கு வாக்களித்த மக்களுக்கு மெதுவாகவிடை கிடைக்க ஆரம்பித்திருக்கின்றது.
இரண்டாவதாக, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவின் பதவி பறிப்புசம்பந்தமாக ஜனாதிபதி கோட்டாபய எவரிடமும் ஆலோசித்திருக்கவில்லை. பிரதமராகவும் ,நிதி அமைச்சராகவம் விளங்கும் தனது சகோதரர்களுடன் ஆலோசனை நடத்தினாரா என்பதுதெரியவில்லை. ஆனால் அமைச்சரவையில் எவருக்கும் இந்த விடயம் தெரிந்திருக்கவில்லை.
அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூட, ஜனாதிபதியின்இந்த தீர்மானம் குறித்து தனக்குத் தெரியவில்லை, என்று அறிவித்திருந்தார்.
அமைச்சரவையில் உள்ளவர்களுக்கும் ஜனாதிபதியின் தன்னிச்சையான முடிவுகள்எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பது குறித்து புதிதாக ஒன்றும்கூறத்தேவையில்லை.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-01-09#page-6
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM