மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள தாண்டியடி புதுமண்டபத்தடியிலுள்ள பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு மற்றும் மதுபான விற்பனையில் ஈடுபட்டுவந்த இரு வீடுகளை பொலிசார் நேற்று சனிக்கிழமை (8) முற்றுகையிட்டு அங்கு இருந்த தாயும் மகளையும் கைது செய்ததுடன் கசிப்பு மற்றும் மதுபானப் போத்தல்களை மீட்டுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய சம்பவதினமான நேற்று மாலை குறித்த பகுதியிலுள்ள இரு வீடுகளை முற்றுகையிட்டபோது ஒரு வீட்டில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவரை 5 லீற்றர் கசிப்புடன் கைது செய்தனர்.
அத்துடன் அருகிலிருந்த வீட்டை முற்றுகையிட்ட பொலிசார் அரச மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த பெண் ஒருவரை மதுபானத்துடன் கைது செய்தனர்.
இதில் கைதுசெய்யப்பட்ட இருவரும் தாயையும், மகளையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM