(எம்.மனோசித்ரா)
அரச உத்தியோகத்தர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரித்து பொதுநிர்வாக அமைச்சினால் புதிய சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.
இம்மாதம் முதலாம் திகதி முதல் இந்த சுற்று நிரூபம் அமுல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிரூபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நிதி அமைச்சரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் அரச உத்தியோகத்தர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிப்பதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டது.
அதற்கமைய ஓய்வூதிய சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்காக கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரித்துள்ளமையானது , அரசியலமைப்பில் அல்லது வேறு சட்டங்களின் ஊடாக ஓய்வு பெறுவதற்கான வயது ஸ்திரமாக்கப்பட்டுள்ளவர்கள் தவிர்ந்த ஏனைய அனைவருக்கும் பொதுவானதாகும். இந்த சுற்றுநிரூபம் இம்மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM