ஏப்ரல் முதலாம் திகதிக்குள் அனைத்து மதுபான போத்தல்களிலும் பாதுகாப்பு முத்திரைகள்

Published By: Vishnu

06 Jan, 2022 | 11:27 AM
image

எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதிக்குள் நாட்டிலுள்ள அனைத்து மதுபான போத்தல்கள் மற்றும் டின்களிலும் பாதுகாப்பு முத்திரை/ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் பல கட்டங்களின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க குறிப்பிட்டார்.

ஜனவரி 3 ஆம் திகதி முதல் நாட்டில் உரிமம் பெற்ற மதுபான ஆலைகள் மதுபான போத்தல்கள் மற்றும் டின்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர்களை ஒட்டுவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புதிய முத்திரைகள் ஒட்டப்பட்ட மதுபான போத்தல்கள் சந்தைகளுக்கு விநியோகிக்கப்பட்டதன் பின்னர் , பழைய மதுபான போத்தல்களை விற்பனை செய்து நிறைவு செய்வதற்கு ஏப்ரல் முதலாம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04