பிரியந்த குமாரவின் படுகொலை வழக்கில் கைதான 85 பேருக்கான விளக்கமறியல் உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சியால்கோட் தொழிற்சாலை முகாமையாளரான இலங்கை பிரஜை பிரியந்த குமாரவின் படுகொலையுடன் தொடர்புடைய 85 பேரையும் ஜனவரி 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குஜ்ரன்வல பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் இன்று (03) உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பில் தொழிற்சாலையின் தொழிலாளர்கள் உட்பட அடையாளம் தெரியாத நூற்றுக்கணக்கானவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டும் உள்ளது.
மதம் சார்ந்த உள்ளடக்கம் கொண்ட சுவரொட்டியை அகற்றியதற்காக பிரியந்த குமார மீது அவதூறு குற்றம் சாட்டப்பட்டு, கடந்த டிசம்பர் தொடக்கம் சியால்கோட்டில் வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டு பின்னர் தீ வைத்து எரிக்கப்பட்டார்.
எனினும் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களால் குமார மீது அவதூறு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டமை பின்னர் தெரியவந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM