மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பாலைமீன்மடு 50 வீட்டுத் திட்டப் பகுதியில், மது போதையில் இரு குழுக்கழுக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் ஒருவர் படுகாயமடைந்ததுடன் வீடு ஒன்று தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியிலுள்ள மீன்பிடியில் ஈடுபட்டுவரும் இருகுழுவினரும் சம்பவதினமான நேற்று சனிக்கிழமை (01) ஒன்றாக மதுபானம் அருந்தியுள்ள நிலையில் ஏற்பட்ட வாய்த்தர்கம் சண்டையாக மாறியதையடுத்து 119 பொலிஸ் அவசர சேவை இலக்கத்துக்கு கிடைத்த தகவலுக்கமைய பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்றதையடுத்து இரு குழுவினரும் சாமாதானமாகினர்.
இதில் காயமடைந்த ஒருவரை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் இருகுழுக்களையும் பொலிசார் சண்டை போடக்கூடாது என எச்சரித்து சென்றனர்.
இந்த நிலையில் இந்த குழு ஒன்றுடன் தொடர்புபட்ட நாகநாதன் நவநீதனின் குடும்பத்தினர் பயத்தில் அருகிலுள்ள வீட்டில் நேற்று இரவு சென்று தங்கிருந்த நிலையில் குறித்த நபரின் வீட்டை இன்று அதிகாலை இனந்தெரியாத ஒருவர் தீயிட்டுள்ளதையடுத்து வீடு முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற கொக்குவில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM