துறைமுகத்தில் பொருட்கள் தேக்கம் ! அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் அரசாங்கத்திடம் விடுத்துள்ள வேண்டுகோள் !

Published By: Digital Desk 3

29 Dec, 2021 | 04:49 PM
image

(இராஜதுரை ஹஷான்)

டொலர் நெருக்கடி காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட அரிசி அடங்கிய 300 கொள்கலன்களை விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்களை விடுவிக்க அரசாங்கம் உரிய திட்டங்களை செயற்படுத்த வேண்டும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

டொலர் நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யும் போதும் அவற்றை துறைமுகத்தில் இருந்து விடுவிக்கும் போது பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளோம்.

இதுவரையிலான காலப்பகுதில் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய சுமார் 1500 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேக்கமடைந்துள்ளன.

தற்போதைய நிலையில் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி அடங்கிய 300 கொள்கலன்களை விடுவிக்க முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. டொலர் பிரச்சினைக்கு விரைவான தீர்வு பெற்றுத்தருமாறு வர்த்தகத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம்.

அத்தியாவசிய பொருள் இறக்குமதிக்கு அரசாங்கம் டொலர் விநியோகித்தால் எதிர்வரும் முதல் காலாண்டுக்கு தேவையான அரிசியை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய எதிர்பார்த்துள்ளோம்.வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்வதிலும் சிக்கல் நிலை தற்போது தோற்றம பெற்றுள்ளன.

அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யும் போது  இறக்குமதியாளர்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் விரைவில் தீர்வு வழங்காவிடின் அத்தியாவசிய பொருள் விநியோகத்தில் சிக்கல் நிலை ஏற்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீன விஜயத்தை நிறைவு செய்து நாடு...

2025-01-18 00:26:54
news-image

குறுகிய அரசியல் நோக்கத்துக்காக விமர்சித்த அனைத்தையும்...

2025-01-17 16:15:00
news-image

வியட்நாமில் உலகத் தமிழர் மாநாடு :...

2025-01-17 16:56:51
news-image

அரிசி பிரச்சினைக்கு இரண்டு வாரங்களில் தீர்வு...

2025-01-17 22:14:38
news-image

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய பணத் தொகையுடன்...

2025-01-17 21:52:18
news-image

ஈழத்தமிழர்களின் இறைமையை நிலைநாட்ட "சமஷ்டியே" தேவை!

2025-01-17 21:35:16
news-image

சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு...

2025-01-17 21:07:19
news-image

ஈழத்து சிறுவர் நாடக தந்தை குழந்தை...

2025-01-17 20:49:36
news-image

போதைப்பொருளை தடுக்கும் தேசிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்...

2025-01-17 17:32:28
news-image

முல்லை பொதுவைத்தியசாலையின் வளப் பற்றாக்குறைதொடர்பில் சுகாதார...

2025-01-17 18:38:43
news-image

தெற்கில் பாதிக்கப்பட்டவர்களும் எம்மைப்போன்றவர்களே - லீலாதேவி...

2025-01-17 18:20:35
news-image

மறுசீரமைக்கப்பட்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் நீதிமன்ற...

2025-01-17 18:11:05