வியட்நாம் நாட்டை சேர்ந்த ஜியாங் குவோக் கோ மற்றும் ஜியாங் குவோக் ஜிகய்ப் என்ற சகோதரர்கள் இருவரும் புதிய கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளனர்.
குறித்த இருவரும், சிறு வயது முதலே சாகசப் போட்டிகளில் அதீத ஆர்வம் கொண்டவர்களாக விளங்கிய இவர்கள், பல்வேறு ஸ்டண்ட் சாகசங்களை புரிந்துள்ள இவர்கள் தற்போது அனைவரையும் ஆச்சர்யம் அடைய செய்யும் வகையில், புதிய கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளனர்.
அதாவது ஒரு சகோதரர் தலையில் மற்றொரு சகோதரர் தலைகீழாக தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டு, கீழே இருந்த சகோதரர் 53 வினாடிகளில் 100 படிக்கட்டுகளில் ஏறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
கடந்த 23 ஆம் திகதி ஸ்பெய்னின் ஜிரோனாவில் உள்ள செயிண்ட் மேரிஸ் கதீட்ரலுக்கு வெளியே இருந்த படிகளில் இவர்கள் தங்கள் கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
இது குறித்து சகோதரர்களில் ஒருவரான ஜியாங் குவோக் கோ தெரிவிக்கையில்.
நாங்கள் 15 ஆண்டுகளாக இந்த சாதனையை நிகழ்த்த ஒத்திகை பார்த்து வருகிறோம். எங்கள் கடினமான பயிற்சியின் போது ஏராளமான விபத்துக்கள் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
ஆனால் இன்று நாங்கள் மகிழ்ச்சியாக உணர்கிறோம். இறுதியாக 53 வினாடிகளுக்குள் 100 படிகளை ஏறிவிட்டோம் இதை நாங்கள் நினைத்து பார்க்கவில்லை.
இந்த நாளை அனைவரும் நினைவில் வைத்திருப்பார்கள் என்று நம்புகிறேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் 90 படிகளை 52 வினாடிகளில் ஏறி இருந்தோம். இப்போது அதை 100 படிகளாக மாற்றியுள்ளோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM