வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர் சடலமாக மீட்பு 

Published By: Digital Desk 4

27 Dec, 2021 | 04:03 PM
image

வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். 

இயந்திரப் படகு ஒன்றில் மூன்று மீனவர்கள் நேற்று மாலை (26) மீன் பிடிக்க ஆழ்கடலுக்குச் சென்றுள்ளனர். 

இவ்வாறு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் ஒருவரே நேற்று ஆழ்கடலில் வைத்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது ஏனைய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை அஸன் பாவா வீதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 47 வயதுடைய முகம்மது இஸ்மாயில் பாரூக் என்பவராவார். 

உயிரிழந்த நபரின் உடல் இன்று (27) கரைக்கு கொண்டுவரப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31
news-image

ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர்...

2025-02-15 14:40:41
news-image

நுரைச்சோலை மின்னுற்பத்தி இயந்திரங்கள் மீண்டும் செயற்பட...

2025-02-15 16:34:16
news-image

தம்பகல்ல பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய...

2025-02-15 15:42:37
news-image

மிகவும் பலவீனமான ஆட்சியே இன்று நாட்டில்...

2025-02-15 15:36:36
news-image

கொழும்பு மாவட்டத் தலைவர் பதவியை தனதாக்கிக்...

2025-02-15 14:34:51
news-image

யாழ். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூலகத்தை...

2025-02-15 16:35:56
news-image

சுற்றுலா விசாவில் வந்து நகைத் தொழிலில்...

2025-02-15 15:38:56