வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இயந்திரப் படகு ஒன்றில் மூன்று மீனவர்கள் நேற்று மாலை (26) மீன் பிடிக்க ஆழ்கடலுக்குச் சென்றுள்ளனர்.
இவ்வாறு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் ஒருவரே நேற்று ஆழ்கடலில் வைத்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது ஏனைய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை அஸன் பாவா வீதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 47 வயதுடைய முகம்மது இஸ்மாயில் பாரூக் என்பவராவார்.
உயிரிழந்த நபரின் உடல் இன்று (27) கரைக்கு கொண்டுவரப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM