புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினர் புகையிரத திணைக்கள அதிகாரிகளுடன் இன்று காலை 10.00 மணிக்கு முக்கிய கலந்துரையாடலில் ஈடபடவுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையினை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்த தீர்மானம் எடுக்கப்படும் என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார்.
24 கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினர் கடந்த 23 ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.
புகையிரத பொதி சேவை விநியோகம், சாதாரன புகையிரத பயணச்சீட்டு விநியோகம் உள்ளிட்ட கடமைகளில் இருந்து அவர்கள் விலகியிருந்தனர்.
புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளின் பதவி உயர்வு, இடமாற்றத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க புகையிரத திணைக்களம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட புகையிரதங்களையும் பயணிகள் புகையிரத சேவையில் ஈடுப்படுத்தவில்லை.
இந் நிலையில் தொழிற்சங்க நடவடிக்கை குறித்து இன்று புகையிர திணைக்கள அதிகாரிகளுடன் தீர்மானமிக்க பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதால் தொடரவிருந்த முழுமையான பணிப்புறக்கணிப்பு போராட்டம் நேற்று தற்காலிகமாக பிற்போடப்பட்டது.
இன்றைய பேச்சுவார்த்தையில் சாதகமான தீர்வு கிடைக்காவிடின் அடுத்தக் கட்ட தொழிற்சங்க நடவடிக்கை குறித்து தீர்மானிப்போம் என்று கசுன் சாமர மேலும் கூறினார்.
புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் பயணச் சீட்டு விநியோகிப்பதை பகிஷ்கரித்துள்ளதால் தினமும் 5 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM