புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் போராட்டம் பிற்போடப்பட்டது

Published By: Vishnu

26 Dec, 2021 | 04:17 PM
image

(இராஜதுரை ஹஷான்)

புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினர் இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்க இருந்த முழுமையாக பணிப்புறக்கணிப்பு போராட்டம் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளது.

நாளை புகையித திணைக்கள அதிகாரிகளுடன் இடம்பெறும் பேச்சுவார்த்தையினை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்த தீர்மானம் எடுக்கப்படும் என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.

24 கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினர் கடந்த 23 ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளோம்.

புகையிரத பொதி சேவை விநியோகம், சாதாரன புகையிரத பயணச்சீட்டு விநியோகம் உள்ளிட்ட கடமைகளில் இருந்து விலகியுள்ளோம்.

புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளின் பதவி உயர்வு, இடமாற்றத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க புகையிரத திணைக்களம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட புகையிரதங்களையும் பயணிகள் புகையிரத சேவையில் ஈடுப்படுத்தவில்லை.

புயணிகளின் நலனைகருத்திற் கொண்டு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் இணக்கம் தெரிவித்துள்ளார். 

பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் இன்று நள்ளிரவு முதல் முழுமையான பணி புறக்கணிப்பில் ஈடுப்பட தீர்மானித்திருந்தோம்.

தொழிற்சங்க நடவடிக்கை குறித்து நாளை புகையிர திணைக்கள அதிகாரிகளுடன் தீர்மானமிக்க பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதால் தொடரவிருந்த முழுமையான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தற்காலிகமாக பிற்போட்டுள்ளோம்.

நாளை பேச்சுவார்த்தையில் சாதகமான தீர்வு கிடைக்காவிடின் அடுத்தக் கட்ட தொழிற்சங்க நடவடிக்கை குறித்து தீர்மானிப்போம் என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப எந்த அரசாங்கமும் முயற்சியை...

2023-09-24 19:30:52
news-image

அலி சப்ரி ரஹீம் தொடர்பில் ஏன்...

2023-09-24 19:44:10
news-image

கலைஞர்கள், ஊடகவியலாளர்களுக்காக சீன அரசாங்கத்தின் உதவியுடன்...

2023-09-24 19:10:51
news-image

மாகாண அதிகாரம் மத்திக்கு : ஆளுநர்...

2023-09-24 19:31:50
news-image

மன்னாரில் நடைபெறவிருந்த தேசிய மீலாத்துன் நபி...

2023-09-24 19:32:58
news-image

ஏமாற்றமளித்துள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின்...

2023-09-24 19:49:13
news-image

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரப்படக்கூடாது...

2023-09-24 19:52:19
news-image

கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமை வலுவடைந்துள்ளது...

2023-09-24 19:52:41
news-image

வலுவானதும் சுபீட்சமானதுமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கான ஒத்துழைப்பு...

2023-09-24 19:53:15
news-image

மட்டக்களப்பில் டெங்கு நோய் தீவிரம் :...

2023-09-24 17:35:26
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் திருட்டில் ஈடுபட்ட ...

2023-09-24 16:57:18
news-image

மட்டு. ஷரிஆ பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டுக்கு இலங்கை...

2023-09-24 16:42:45