சீனாவின் முதலாவது தொங்கும் புகையிரத சேவையின் சோதனை ஓட்டம் வெற்றியளித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் தலைநகர் செஞ்க்டுவில் நேற்று இந்த புகையிரத சேவையின் சோதனை ஓட்டம் இடம்பெற்றுள்ளது
குறித்த புகையிரதமானது இலித்தியம் பேட்டரி மின்சக்தியில் இயங்குவதோடு, மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லுமென தெரிவிக்கப்படுகின்றது.
முதல் கட்டமாக 300 மீற்றர் புகையிரத பாதையில் புகையிரத சோதனை ஒட்டம் வெற்றிகரமான நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகையிரதத்தில் 120 பயணிகள் பயணிக்க முடியும் என திட்டத்தின் பிரதான வடிவமைப்பாளரான ஜியாடெங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜாய் வான்மிங் தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோ மீற்றர் சுரங்க புகையிரத பாதையினை அமைக்க செலவாகும் தொகையை விட 5 இல் ஒரு வீதமே தொங்கு புகையிரத பாதையை அமைக்க செலவாகும் என அவர் கூறியுள்ளார்.
மேலும் குறித்த புகையிரதத்திற்கு இலித்தியம் பேட்டரிகள் பயன்படுத்துவதால் சுற்றுச் சூழலுக்கு உகந்ததாக இருப்பதாகவும், குறித்த புகையிரத பாதையின் நீளத்தை 1.2 கிலோ மீற்றர் தூரத்திற்கு விரிவாக்க உள்ளதாகவும், பின்னர் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்திற்கு புகையிரத பாதையினை விரிவாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM