(எம்.ஆர்.எம்.வசீம்)
வாகன சாரதி அனுமதி பத்திரம் விநியோகிக்கும் ஒருநாள் சேவை மறு அறிவித்தல்வரை நிறுத்தப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அநுராதபுரம் மற்றும் அம்பாந்தோட்டை காரியாலயங்களில் இடம்பெற்றிருக்கும் பாரிய மோசடி வியாபார காரணமாகவே ஒருநாள் சேவை உடன் அமுலுக்கு வரும்வகையில் நிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம் சாரதி அனுமதி பத்திரம் அச்சிடும் பிரதான காரியாலயமான மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வேகர காரியாலயம், அநுராதபும் மற்றும் அம்பாந்தோட்டை காரியாலயங்களிலும் மறு அறிவித்தல்வரை ஒருநாள் சேவையின் கீழ் புதிய வாகன சாரதி அனுமதி பத்திரம் விநியோகிக்கவேண்டாம் என போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளருக்கு வழங்கிய ஆலாேசனைக்கமையவே ஒருநாள் சேவையை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அநுராதபும் மற்றும் அம்பாந்தோட்டை காரியாலயங்கள் ஊடாக நடைமுறை பரிசோதனைகள் முடிவுற்ற தினத்துக்கு மறு தினமே உடனடியாக வாகன அனுமதி பத்திரம் அச்சிட்டு வழங்குவதாகவும் அந்த காரியாலய அதிகாரிகள் சிலர் ஆயிரக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாகவும் ராஜாங்க அமைச்சருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமையவே இந்த உத்தரவு பிரப்பிக்கப்பட்டிருக்கின்றது.
இருந்தபோதும் வழமையான முறையில் சாரதி அனுமதி பத்திரம் அச்சிடும் நடவடிக்கை இந்த காரியாலயங்கள் ஊடாக தொடர்ந்து இடம்பெறுவதுடன் அனுமதி பத்திரம் புதுப்பித்தல், காணாமல் போன சாரதி அனுமதி பத்திரங்கள் அச்சிடுதல் உட்பட காரியாலயத்தின் ஒருநாள் சேவைகள் ஊடாக தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
வெளிநாட்டுக்கு செல்வது அல்லது அத்தியாவசிய தேவைக்கு அல்லாமல் ஒருநாள் சேவை ஊடாக புதிய சாரதி அனுமதி பத்திரம் அச்சிடப்படமாட்டாது. இதனைத்தவிர ஏனைய ஒருநாள் சேவைகள் வழமையான முறையில் திணைக்களம் ஊடாக இடம்பெறும்.
நடைமுறை பரிசோதனைகள் முடிந்த பின்னர் தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்பட்டு, சாரதி அனுமதி பத்திரத்தை தபால் ஊடாக விநியாேகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுமித் அலககோன் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM