டிசம்பர் 26 முதல் புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பில்

Published By: Vishnu

21 Dec, 2021 | 07:09 PM
image

(இராஜதுரை ஹஷான்)

புகையிரத  நிலைய பொறுப்பதிகாரிகள் சேவையில் நிலவும் பல்வேறு குறைபாடுகளுக்கு தீர்வு கோரி புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினர் எதிர்வரும் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுப்பட தீர்மானித்துள்ளதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.

சுமார் 700 புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பல வருடகாலமாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. கனிஷ்ட புகையிரத சேவையாளர் பதவி வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை உள்ளிட்ட பல பிரச்சினைகள் புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்திற்குள் காணப்படுகிறது.

பிரச்சினைகள் குறித்து புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினரிடமும்,போக்குவரத்து துறை அமைச்சரிடமும் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றிப் பெறாத காரணத்தினால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுப்பட தீர்மானித்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். சுன்னாகத்தில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ்...

2025-03-18 09:58:56
news-image

நீர்கொழும்பு - யாழ்ப்பாண வீதியில் இடம்பெற்ற...

2025-03-18 09:42:08
news-image

கொழும்பு கிராண்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு...

2025-03-18 09:24:40
news-image

கனடாவில் இருந்து வந்தவர்கள் பயணித்த கார்...

2025-03-18 09:27:06
news-image

கட்டானவில் நாளை 16 மணி நேர...

2025-03-18 09:20:21
news-image

இன்றைய வானிலை

2025-03-18 06:13:34
news-image

'பூஜா பூமி' அபிவிருத்தி திட்டத்தின் கீழ்...

2025-03-18 04:13:02
news-image

காவியுடை அணிய தகுதியில்லாத ஒருசிலர் வடக்கில்...

2025-03-18 04:01:35
news-image

தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்

2025-03-18 03:53:38
news-image

முறையாக நடந்துகொள்ள தெரியாத ஒருவருக்கு நாங்கள்...

2025-03-18 03:48:50
news-image

8 வயதுக்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் அவர்களுக்கு...

2025-03-18 02:50:14
news-image

அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை புறக்கணிப்பது...

2025-03-18 02:44:35