நாட்டின் பொருளாதாரத்தில் சிறந்த அறிகுறி தென்படவில்லை என்கிறது அரசாங்கம்

Published By: Digital Desk 3

21 Dec, 2021 | 09:04 PM
image

(எம்.மனோசித்ரா)

டொலர் நெருக்கடி குறித்து இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாடு குறித்து இன்று மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெளிவுபடுத்துவார்.

வெளிநாட்டு கடன் சுமை அதிகரித்துச் செல்வதால், அந்நிய செலாவணி இருப்பு வீழ்ச்சியடைந்து செல்கின்றமை நாட்டின் பொருளாதாரத்தில் சிறந்த அறிகுறியல்ல என்பதை ஏற்றுக் கொள்வதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

நாட்டில் தற்போது அந்நிய செலாவணி இருப்பு பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும் இவ்வாண்டு இறுதியாகும் போது அந்நிய செலாவணி இருப்பினை 3 பில்லியன் டொலர் வரை அதிகரிக்க முடியும் என்று மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் அண்மையில் தெரிவித்திருந்தார்.

ஆனால் அது எவ்வாறு என்ற வழிமுறை அவரால் தெளிவுபடுத்தப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் அந்நிய செலாவணி இருப்பினை அதிகரிப்பதற்கு அரசாங்கம் கடன் பெற்றுக் கொள்ளப்போகும் வழிமுறை யாது? கடனைப் பெற்றுக் கொள்வதற்காக திருகோணமலை துறைமுகம் அல்லது எண்ணெய் குதங்களை இந்தியாவிற்கு வழங்கும் திட்டம் காணப்படுகிறதா என்று நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பான கேள்விகளுக்கு நாளை (இன்று) இடம்பெறவுள்ள விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் பதிலளிப்பார். 

அந்நிய செலாவணி இருப்பு பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளமையை ஏற்றுக் கொள்கின்றோம். தற்போதைய அரசாங்கத்தினால் வெளிநாட்டு கடன் சுமை அதிகரிக்கப்பட்டமையால் இந்த நிலைமை ஏற்படவில்லை.

இலங்கையில் அந்நிய செலாவணி இருப்பு வீழச்சியடைந்துள்ளமை இரகசியமும் இல்லை. இவ்வாறு அந்நிய செலாவணி இருப்பு வீழ்ச்சியடையும் பிரச்சினைக்கான ஒரு தீர்வாகவே மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு உள்ளிட்டவை கலந்தாலோசித்து எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானித்தன.

காரணம் மாதாந்தம் எரிபொருள் இறக்குமதிக்காக மாத்திரம் 350 - 400 மில்லியன் டொலர் செலவிடப்படுகிறது. அந்நிய செலாவணி இருப்பு மாதாந்தம் வேகமாக வீழ்ச்சியடைவதற்கு இது பிரதான காரணியாகவுள்ளது. எனவே எரிபொருள் பாவனையை முறையாக முகாமைத்துவம் செய்ய வேண்டும் நிலைப்பாட்டில் நிதி அமைச்சும் , பெற்றோலிய கூட்டுத்தாபனமும் , மத்திய வங்கியும் ஸ்திரமாகவுள்ளன.

எனினும் இது நாட்டின் பொருளாதாரத்தில் சிறந்த அறிகுறி அல்ல என்பதை அனைவரும் அறிவர். அதே போன்று இது ஒரு அரசாங்கத்தினால் மாத்திரம் ஏற்பட்ட பிரச்சினையும் அல்ல. 

மாறாக நீண்ட காலமாக எமது கொள்கைகள், திட்டமிடல்களில் காணப்பட்ட குறைபாடுகளினால் ஏற்பட்ட நெருக்கடியாகும். எனவே அரசாங்கம் என்ற ரீதியில் இந்த பிரச்சினைக்கான பொறுப்புகூறலிலிருந்து ஒருபோதும் விலக முடியாது.

இதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகும். இதில் எவ்வித ஒழிவு மறைவும் கிடையாது. 

வெளிநாட்டு கடன் சுமை அதிகரித்துச் செல்வதால், அந்நிய செலாவணி இருப்பு வீழ்ச்சியடைந்து செல்கின்றமை ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் சிறந்த அறிகுறியல்ல என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளரின் நடவடிக்கை குறித்து...

2026-02-11 17:20:23
news-image

தேர்ந்தெடுக்கப்பட்ட நீதி மற்றும் அரசியல் உள்நோக்கம்...

2026-02-11 19:01:22
news-image

இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை...

2026-02-11 15:22:48
news-image

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என உறுதியளித்தபோதிலும்,...

2026-02-11 18:46:10
news-image

மாகாணசபை தேர்தல் நடத்த அரசு தயக்கம்...

2026-02-11 17:28:08
news-image

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் :...

2026-02-11 18:43:13
news-image

சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த எந்த நாடும்...

2026-02-11 21:24:46
news-image

தட்டுப்பாடின்றி மருந்துகளை வழங்க வைத்தியசாலையில் மருந்துகள்...

2026-02-11 17:04:09
news-image

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: 4...

2026-02-11 19:26:14
news-image

2025 ஆம் ஆண்டில் சுமார் 2,355...

2026-02-11 17:01:17
news-image

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி : தம்பதிகள்...

2026-02-11 16:15:32
news-image

ஐரோப்பிய ஒன்றிய பிரமுகர்களை சந்தித்த சாணக்கியன்,...

2026-02-11 18:08:18