பதுளையில் மேலதிக வகுப்புக்குச் சென்ற உயர்தர மாணவி மாயம்

Published By: Digital Desk 4

20 Dec, 2021 | 10:00 PM
image

பதுளையில் இன்று மேலதிக வகுப்புகளுக்காக சென்ற பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய மாணவி, காணாமல் போயுள்ளதாக குறித்த மானவியின் தாய் பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தில் தரம் 12 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 17 வயது  லோகேஸ்வரன் லோஜினி என்ற மாணவியே, இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

பதுளை நகரில் உள்ள மேலதிக வகுப்பொன்றிற்கு, நேற்று 19.12.202 சென்ற குறித்த மானவி வீடு திரும்பவில்லையென்றும், பொலிஸ் நிலையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதுளை – கலன் பெருந்தோட்டத்தைச் சேர்ந்த குறித்த மாணவி மேலதிக வகுப்பிற்கு எடுத்து சென்றதாக கூறப்படும் பாடசாலை புத்தகப்பை மற்றும் பாதணிகள் ஆகியன பதுளை - கோபோ பகுதியின் நீர் நிலையொன்றின் அருகே, (தெப்பக்குளம்) இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தோட்ட இளைஞர்கள் குழுவொன்று, மேற்படி நீர் நிலையில் தேடுதல்களை மேற்கொண்டுள்ளனர். ஆனால் இது வரை மாணவி குறித்து எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை.

இதையடுத்து, மாணவியின் தாயாரும், உறவினர்களும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமாரிடம் செய்த புகாரையடுத்து, காணாமல் போன மாணவி, நீர் நிலையில் விழுந்திருக்க கூடுமென்ற சந்தேகம் எழுப்பட்டிருப்பதால், அம் மாணவி குறித்த தேடுதல்களை உடன் மேற்கொள்ளுமாறு, பதுளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அவசர கடிதமொன்றினை அனுப்பியுள்ளார்.

அத்துடன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் நேரடியாகவும், இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார். 

இதனையடுத்து, பதுளை பொலிஸ்சார் சுழியோடிகள் சகிதம், குறித்த நீர் நிலை பகுதிக்கு சென்றுள்ளனர். இம் மாணவி குறிப்பிட்ட நீர் நிலையில் விழுந்து தற்கொலை செய்துள்ளாரா அல்லது திசை திருப்பும் வகையில் அவரது புத்தகப்பை பாதணிகள் ஆகியவற்றை நீர் நிலை அருகில் போடப்பட்டு கடத்தப்பட்டாரா என்ற வகையில் பொலிசார் இரு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அநத மாணவி குறித்து தொடர்ந்தும் பதுளை பொலிசார் தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் 30...

2025-04-28 11:30:28
news-image

ஊழலுக்கும் குற்றங்களுக்கும் இருந்துவந்த அரசியல் பாதுகாப்பை...

2025-04-28 11:29:15
news-image

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு நிராகரிப்பு!

2025-04-28 11:11:11
news-image

பெண்ணை கொலை செய்து சடலத்தை துண்டுகளாக...

2025-04-28 11:09:03
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிடி, எம்ஆர்ஐ...

2025-04-28 11:29:31
news-image

பாராளுமன்ற சபாநாயகர் இன்றுவரை தனது கல்விச்...

2025-04-28 10:35:58
news-image

கண்டியில் 600 மெற்றிக் தொன் திண்மக்கழிவுகள்...

2025-04-28 10:23:31
news-image

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலஞ்சம்,...

2025-04-28 11:26:54
news-image

ரயில் முன் பாய்ந்து ஒருவர் உயிர்மாய்ப்பு...

2025-04-28 09:52:57
news-image

மின்னல் தாக்கியதில் தந்தை, மகன் உள்ளிட்ட...

2025-04-28 09:10:26
news-image

ஒரு தொகை போதைப்பொருட்கள் இன்று அழிக்கப்படவுள்ளன...

2025-04-28 09:05:21
news-image

கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் ஆரோக்கியமான...

2025-04-28 08:52:58