நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த பிக்குகளுக்கான ஒழுங்கு விதிகள் தொடர்பான சட்டமூலத்தையும் பாராளுமன்றத்தில் சமர்பிப்பது குறித்தான இறுதி தீர்மானத்தை எடுக்கும் முகமாக புத்தசாசன மற்றும் நீதி அமைச்சர் விஜய தாஸ ராஜபக் ஷ இன்ரைய தினம் அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
குறித்த சட்டமூலம் ஏற்கனவே பாராளுமன்றத்தில் நிறைவேற்ற திட்ட மிடப்பட்டிருந்த போதிலும் நாட்டிலுள்ள பௌத்த பிக்கு அமைப்புகள் பெரும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தன. இத்த கைய நிலையில் இதனை மீள திருத்தம் செய்த பின்னர் நிறைவேற்றுவதற்கு அரசாங் கம் தீர்மானித்தது.
இந்நிலையில் பிக்குகள் தொடர்பான முறைகேடுகளை விசாரணை செய்வதற்கு பிரத்தியேக நீதிமன்றம் உள்வாங்கும் திட்டத்திற்கே பௌத்த பிக்குகள் பெரும் எதிர்ப்பினை வெளியிட்டனர். எனினும் தற்போது குறித்த சட்டமூலம் அமைச்சினால் மீள்வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த சட்டமூலம் தொடர் பில் அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநா யக்க தேரர்களுடன் இன்று நீதி அமைச் சர் விஜயதாஸ ராஜபக் ஷ விசேட பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளார். இந்த பேச்சுவார்த்தை சட்டமூலம் தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கும் முகமாகவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த சட்டமூலம் தொடர்பில் ஏனைய பௌத்த பீட மகாநாயக்க தேரர்களிடமும் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
மேற்குறித்த பேச்சுவார்த்தை முடிந்த கையோடு இந்த சட்டமூலத்தையும் அடுத்த வாரம் பாராளுமன்ற விவாதத்திற்கு உள்வாங்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM