நெடுங்கேணியில் எரிவாவு அடுப்பு வெடித்ததில் சமையலறையில் தீப்பரவல்

Published By: Digital Desk 4

19 Dec, 2021 | 11:13 AM
image

வவுனியா, நெடுங்கேணி பகுதியில் எரிவாவு அடுப்பு வெடித்து சமையலறையில் தீப் பிடித்து எரிந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று (18) பிற்பகல் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, நெடுங்கேணி, சேனைப்பிலவு கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட மாமடு கிராமத்தில் உள்ள வீடு ஒன்றின் சமையலறையில் இருந்த எரிவாவு அடுப்பு திடீரென வெடித்து தீப் பற்றி எரிந்துள்ளது.

இதனை அவதானித்த வீட்டார் உடனடியாக எரிவாவு சிலிண்டரை அடுப்பில் இருந்து அகற்றி வீட்டிற்கு வெளியே கொண்டு சென்றதுடன், நீரினை விசிறி தீயிணைக் கட்டுப்பாட்டுகுள் கொண்டு வந்தனர்.

இதனால் வீட்டில் உள்ள எவருக்கும் பாதிப்பு ஏற்படாத போதும், சமையலறையில் இருந்த சில பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

இச் சம்பவம் தொடர்பில் நெடுங்கேணிப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் 20 சிறைக்கைதிகள் விடுதலை !

2025-05-12 11:26:09
news-image

ஹெலிகொப்டர் விபத்து ; நீதிமன்றம் பிறப்பித்த...

2025-05-12 11:38:39
news-image

வவுனியாவில் 7 சிறைக்கைதிகள் விடுதலை

2025-05-12 11:24:19
news-image

பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை வைத்தியசாலைகளில் பார்வையிட்டார்...

2025-05-12 11:52:47
news-image

முள்ளிவாய்க்காலில் யாழ். பல்கலை மாணவர்கள் சிரமதானம்

2025-05-12 11:32:34
news-image

சந்தேகத்திற்கிடமான முறையில் தம்பதி உயிரிழப்பு!

2025-05-12 10:50:49
news-image

புகையிரதம் மோதி ஒருவர் உயிரிழப்பு –...

2025-05-12 11:31:49
news-image

தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி ; நாம்...

2025-05-12 11:00:58
news-image

இரு பஸ்கள் மோதி விபத்து ;...

2025-05-12 10:32:44
news-image

அண்ணனை மண்வெட்டியால் தாக்கி கொடூரமாக கொலை...

2025-05-12 10:20:00
news-image

சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக இன்றும்...

2025-05-12 10:16:51
news-image

வட்டுக்கோட்டையில் மாணவனைத் தாக்கிய ஆசிரியருக்கு விளக்கமறியல்

2025-05-12 10:08:42