(எம்.மனோசித்ரா)
நாட்டில் புதிதாக இனங்காணப்பட்டுள்ள ஒமிக்ரோன் தொற்றாளர்களில் ஒருவர் வெளிநாட்டு பிரஜையாவார். குறித்த வெளிநாட்டு பிரஜை இலங்கையிலேயே சிகிச்சை பெற்று வருவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறுனார்.
வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களுக்கு விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்றுறுதி செய்யப்பட்ட சில மாதிரிகள் , கொவிட் பிறழ்வை இனங்காண்பதற்கான ஆய்வுகூட பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அவ்வாறு அனுப்பட்ட மாதரிகளிலேயே புதிய ஒமிக்ரோன் தொற்றாளர்கள் நேற்று இனங்காணப்பட்டனர்.
இவர்களில் ஒருவர் வெளிநாட்டு பிரஜையொருவர் ஆவார். இவர் நாட்டுக்கு வருகை தந்து பின்னர் நாட்டிலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் தொற்று நோயியல் பிரிவினால் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் குறித்த நபர் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே அவர் நாட்டிலிருந்து வெளியேறவில்லை என்றும் , இலங்கையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தொற்று நோயியல் பிரிவு எமக்கு அறிவித்துள்ளது.
குறித்த நபர் ஏற்கனவே கொவிட் தொற்றுக்கு உள்ளானவராவார். தொற்றிலிருந்து குணமடைந்த பின்னர் அவர் செய்து கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொவிட் தொற்று ஏற்படவில்லை என்ற முடிவு கிடைத்துள்ளது.
இதனால் குறித்த நபர் நாட்டுக்கு வருவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் பி.சி.ஆர். பரிசோதனையை செய்து கொள்ளவில்லை.
எனினும் அவரிடம் குறித்த பி.சி.ஆர். இன்மையால் இலங்கைக்குள் வந்தவுடன் விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது பெற்றுக் கொண்ட மாதிரியிலேயே அவருக்கு ஒமிக்ரோன் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. குறித்த நபர் வேறு ஏதேனும் இடங்களுக்குச் சென்றுள்ளாரா என்பது தொடர்பான தகவல்கள் அவர் தங்கியிருந்த சுகாதார மருத்துல அதிகாரி பிரிவினால் சேகரிக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM