(எம்.மனோசித்ரா)
சமையல் எரிவாயு பிரச்சினை தொடர்பில் எரிவாயு நிறுவன தலைவர்களும் அதிகாரிகளும் மக்களுக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும். அதனை விடுத்து அரசாங்கத்தை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் வகையில் நிறுவனத்தலைவர்கள் செயற்படக் கூடாது என்று நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
கொழும்பு- ஹொரன வீதியில் வெரஹர பால நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று இடம்பெற்ற போது ஊடகங்கங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறினார்.
இதன்போது மேலும் கூறிய அவர்,
பாராளுமன்ற கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டு வந்தது தவறு என எதிர்த்தரப்பு பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். அரசியல் நெருக்கடி நிலையில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது தவறு என்று கூறுகின்றனர். அவர்கள் கூறுவதைப் போன்று நாட்டில் என்ன அரசியல் நெருக்கடி நிலை உள்ளது?
பாராளுமன்றம் ஜனவரி 11 ஆம் திகதி கூட இருந்தது. அதனை விட மேலும் 6 நாட்கள் காத்திருக்க முடியாதா? கொவிட் காலத்தில் ஒத்துழைப்பு வழங்காத உலகில் ஒரே ஒரு எதிர்க்கட்சி எமது நாட்டிலே உள்ளது. பாராளுமன்றம் கூடிய பின்னர் இவர்கள் எமக்கு ஆலோசனை தருவார்களா? பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்படுவது புதிய விடயமல்ல.
நாட்டில் டொலர் நெருக்கடி காணப்படுகிறது. அதற்காக மக்களை அசௌகரியத்தில் தள்ள மாட்டோம் என்பதை பொறுப்புடன் தெரிவிக்கிறோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM