இரசாயன உரங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக விசேட செயலணியொன்றை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வேலைத்திட்டத்தை அடுத்த வாரத்திற்குள் ஆரம்பிக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சுகாதார அமைச்சரும் விவசாய அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் அந்த அமைச்சுக்களின் அதிகாரிகளுடன் இசுகாதார அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த செயலணிக்கு சுகாதாரம் உட்பட பல துறைகளைச் சேர்ந்த சுயேச்சையான குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமெனவும், அதற்கான விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அமைச்சர் ரம்புக்வெல்ல வலியுறுத்தினார்.
கடந்த சில வருடங்களாக இது தொடர்பாக நடத்தப்பட்ட சில ஆய்வுகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை இரசாயன உரப் பாவனையை தடுப்பதற்காக விவசாய அமைச்சினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு சுகாதாரம் மற்றும் சுற்றாடல் அமைச்சுக்களின் ஆதரவு மிகவும் அவசியமானது எனவும் இது ஒரு தலைசிறந்த தேசிய வேலைத்திட்டம் எனவும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM