(எம்.எப்.எம்.பஸீர்)
சட்டவிரோதமான முறையில் யானைக் குட்டியை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் தொடரப்பட்ட வழக்கிலிருந்து, பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட முன்னாள் கொழும்பு மேலதிக நீதிவான் திலின கமகேவை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற தலைமை நீதிபதி தமித் தொட்டவத்த இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
6.9 மில்லியன் ரூபா பெறுமதியான ‘சகுரா’ என்ற யானைக்குட்டியை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் நீதிவான் திலின கமகே உட்பட நான்கு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.
உரிமம் இன்றி யானைக்குட்டியை வைத்திருந்தமை, பொய்யான ஆவணங்களை தயாரிக்க செய்ய சதி செய்தமை மற்றும் சம்பந்தப்பட்ட யானைக்குட்டியை போலி ஆவணங்கள் கொண்டு பதிவு செய்தமை உள்ளிட்ட 25 குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த குற்றப் பகிர்வுப் பத்திரிகை தாக்கல் செய்யப்ப்ட்டிருந்தது.
இதில், நீதிவான் திலின கமகே, சந்திரரத்ன பண்டார யடவர, வனவிலங்கு அதிகாரிகளான உபாலி பத்மசிறி மற்றும் பிரியங்கா சஞ்சீவனி ஆகிய நால்வர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கின் ஏனைய மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராகவும் சட்ட மா அதிபரால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில், பிரதிவாதி தரப்பு சாட்சிகளை விசாரணை செய்வதற்கு இதன்போது நீதிபதி தீர்மானித்தார்.
அதன்படி அம் மூவர் தொடர்பிலும் இந்த வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 21 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM