பளை பொலிஸ் பிரிவிட்குட்பட்ட முகமாலை பகுதியில் கடந்த 11 ஆம் திகதி முதல் கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது சீருடைகள்,பழைய வெடிபொருட்கள் மற்றும் மனித எச்சங்கள் என்பன இனங்காணப்பட்டுன.

இந்நிலையில், குறித்த பகுதியை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நேற்று பார்வையிட்ட பின்னர் மேலதிக அகழ்வுகள் இடம்பெறும் எனவும் தெரிவித்திருந்தனர்.
அதற்கு அமைவாக இன்றையதினம் 15 12.2021 கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் அகழ்வுப்பணிகள் இடம்பெற்றன. இவ் அகழ்வு பணிகளின் போது மேலும். சில விடுதலைப்புலிகளின் சீருடை இலக்கத்தகடு என்பன இனங்காணப்பட்ட நிலையில், தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது..