எழுக தமிழ் பேரணியின்போது வடமாகாண முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் முன்வைத்த கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொதுபலசேனா அமைப்பின் தலைமையில் பல அமைப்புகள் ஒன்றிணைந்து இன்று வவுனியாவில் மாமடுவ சந்தியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளன.
வடக்கு கிழக்கில் சிறுபான்மையாக வாழும் சிங்கள மக்களின் பாதுகாப்பை பலப்படுத்தி பெளத்த கொள்கைகளை நாட்டில் நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அண்மையில் வடக்கில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணியில் வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்த கருத்துக்களுக்கு பொதுபல சேனா அமைப்பு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.
அதேபோல் விக்கினேஸ்வரனின் இந்த கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் சிங்கள ராவய, ராவணா பலய ஆகிய அமைப்புகளையும் இணைத்துக்கொண்டு இன்று வவுனியா மாவடுவ சந்தியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கருத்து தெரிவிக்கையில்,
வடக்கிலும் கிழக்கிலும் சிறுபான்மையாக வாழும் சிங்கள மக்களின் பாதுகாப்பு இன்று கேள்விக்குறியாக அமைந்துள்ளது. நாட்டில் சகல பகுதிகளிலும் தமிழர்கள் சுதந்திரமாக வாழ்ந்து வரும் நிலையில் வடக்கில் மாத்திரம் சிங்களவர்களை புறக்கணிப்பது நியாயமற்ற விடயமாகும். ஆகவே சிங்களவர்களின் உரிமைகளையும் அவர்களின் பாதுகாப்பையும் பலப்படுத்தவே நாம் சகல பெளத்த அமைப்புகளையும் ஒன்றிணைத்து போராட தயாராகியுள்ளோம்.
வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவில் ஆட்சியை தக்கவைக்க அரசாங்கம் வாய்மூடி இருக்கலாம். ஆனால் நாட்டுக்காகவும் சிங்கள பெளத்த மக்களுக்கான நாம் பொறுமையாக இருக்க மாட்டோம். நாம் இவ்வளவு காலமும் அமைதியாக நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். ஆனால் இனியும் பொறுமைகாக்க முடியாது.
நாட்டுக்கும் சிங்கள மக்களுக்கும் எதிராக தந்திரமாக புலிகள் அமைப்புகளும் மேற்கத்தேய நாடுகளும் செயற்பட்டு வருகின்றது. ஆகவே நாட்டின் சிங்கள பெளத்த மக்கள் நாட்டுக்காக போராட முன்வரவேண்டும்.அனைத்து பெளத்த சிங்கள அமைப்புகளும் பெளத்த மதத் தலைவர்களும் கட்சி பேதம் இன்று ஒன்றிணைய வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM